TRENDING
தன்னை விட 25 வயது அதிகமானவரை மணந்த இளம்பெண்! திருமணமான 3வது நாளில் அரங்கேற்றிய விபரீத செயல்… புகைப்படம்
வேலூர் மாவட்டத்தை சேர்ந்தவர் சங்கர் (45), பெட்டிக்கடை வைத்துள்ளார். சங்கருக்கும் அதே பகுதியில் வசிக்கும் சாந்தகுமார் என்பவரின் மகள் மகாலட்சுமிக்கும் (20) திருமணம் செய்துவைக்க பெற்றோர் கலந்துபேசியுள்ளனர். சங்கரை விட மகாலட்சுமி 25 வயது இளையவர்.

இப்படியிருக்க கொரோனா லாக்டவுன் அமலில் உள்ள நிலையிலும் கோவிலில் கடந்த மாதம் 29-ம் திகதி அவசர அவசரமாக திருமணம் நடந்துள்ளது. திருமணம் முடிந்த பிறகு கடந்த இரண்டு நாள்களாகக் கணவரின் வீட்டிலிருந்த மகாலட்சுமி திடீரென அறையில் தூ க்கி ட்டு த ற்கொ லை செய்துகொண்டார். மனைவி ச டல மாக தொங்கியதைக் கண்டு சங்கரும் அவரின் குடும்பத்தினரும் அ திர் ச்சியில் உறைந்தனர்.
இதுகுறித்து, மகாலட்சுமியின் தங்கை விஜயலட்சுமி கொடுத்த புகாரின்பேரில், போலிசார் விசாரித்து வருகின்றனர். தன்னை விட அதிக வயது மூத்தவரைத் திருமணம் செய்துகொள்ள மகாலட்சுமியைப் பெற்றோர் கட்டாயப்படுத்தியதால் அவர் இம்முடிவை எடுத்தாரா என விசாரிக்கப்பட்டு வருகிறது.
