CINEMA
பாடி ஷேமிங்கை நார்மலைஸ் செய்கிறாரா ரோபோ சங்கர் மகள்?…குண்டம்மா’ என்று கூப்பிட்ட விஜய்.. கோபப்படாமல் இந்திரஜா செய்த காரியம்…”விஜய் சார் வாயால் இதைக் கேட்க நான் கொடுத்து வச்சிருக்கணும்”… இந்திரஜா பேச்சால் வெடித்த புதிய சர்ச்சை!
பிரபல நகைச்சுவை நடிகர் ரோபோ சங்கரின் மகளும், நடிகையுமான இந்திரஜா, அட்லீ இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான ‘பிகில்’ திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இதில் அவர் ஏற்றிருந்த ‘பாண்டியம்மாள்’ கதாபாத்திரம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. சில வருடங்களுக்கு முன்பு கார்த்திக் என்பவரைத் திருமணம் செய்துகொண்ட இந்திரஜாவிற்கு ஒரு மகன் உள்ளார். தந்தை ரோபோ சங்கரின் மறைவுக்குப் பிறகு, தனது மகனைப் பொறுப்போடு வளர்த்து வரும் இந்திரஜா, அண்மையில் நேர்காணல் ஒன்றில் நடிகர் விஜய் குறித்துப் பேசிய விஷயம் தற்போது சமூக வலைதளங்களில் பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளது.
அந்த நேர்காணலில் பேசிய இந்திரஜா, “பிகில் படப்பிடிப்பின் போது, ‘உன்னைக் குண்டம்மா என்று கூப்பிடலாமா?’ என விஜய் சார் என்னிடம் கேட்டார். அதற்கு நான், உங்கள் வாயிலிருந்து இந்த வார்த்தையைக் கேட்க நான் கொடுத்து வைத்திருக்க வேண்டும்; நீங்கள் சொன்னால் இனி அது பாடி ஷேமிங் (உருவக் கேலி) வார்த்தையாக இருக்காது, செல்லப் பெயராக மாறிவிடும் என்று கூறினேன்” எனத் தெரிவித்துள்ளார். மேலும், விஜய் இந்த வார்த்தையைப் பயன்படுத்திய பிறகு, பலரும் தங்களை ‘குண்டம்மா’ என்று கூப்பிடும்போது கோபப்படாமல் அதை ஒரு செல்லப் பெயராகவே பார்ப்பதாகத் தன்னிடம் கூறுவதாகவும், அந்த வார்த்தைக்கு ஒரு பாசிட்டிவான மாற்றத்தைக் கொடுத்ததே அவர்தான் என்றும் இந்திரஜா பெருமிதத்துடன் குறிப்பிட்டுள்ளார்.
இருப்பினும், இந்திரஜாவின் இந்த விளக்கம் நெட்டிசன்கள் மற்றும் சினிமா விமர்சகர்கள் மத்தியில் கடும் கண்டனங்களை எழுப்பியுள்ளது. விஜய் மீதுள்ள அமிதவடா அன்பின் காரணமாக, உருவக் கேலி போன்ற ஒரு தவறான விஷயத்தை இந்திரஜா சாதாரணமாக மாற்ற (Normalize) முயல்கிறார் என்று பலரும் விமர்சித்து வருகின்றனர். “உருவக் கேலி செய்வது எப்படி செல்லமாக கூப்பிடுவது போல் ஆகும்? ஒரு முன்னணி நடிகர் இதுபோன்ற பாடி ஷேமிங் வார்த்தைகளைப் பயன்படுத்துவது சமூகத்திற்குத் தவறான முன்னுதாரணம்” என்று பிகில் படம் வெளியான போதே விமர்சனங்கள் எழுந்த நிலையில், தற்போது இந்திரஜாவின் இந்த வீடியோவிற்கு இணையவாசிகள் தங்களது எதிர்ப்புகளைப் பதிவு செய்து வருகின்றனர்.
