LATEST NEWS
“உங்க அரசியல் சண்டையை வெளில வச்சுக்கோங்க…!” உச்ச நீதிமன்றத்தில் திமுகவை ஓட ஓட விரட்டிய நீதிபதிகள்..!!!
கடந்த ஆண்டு கரூரில் நடைபெற்ற தவெக மாநாட்டுப் பிரச்சாரக் கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்தனர். இந்தச் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட 41 குடும்பத்தினருக்கு வரும் ஜூலை 10-ஆம் தேதி தமிழ்நாடு முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் நேரில் சென்று அரசு வேலை மற்றும் நிவாரண உதவிகளை வழங்கத் திட்டமிட்டிருந்தார். முதலமைச்சரின் இந்த கரூர் பயணத்திற்குத் தடை விதிக்கக் கோரியும், இவ்விவகாரம் குறித்து முதலமைச்சர் விஜய் மற்றும் தவெக அமைச்சர்கள் பொதுவெளியில் பேசக் கூடாது என உத்தரவிடக் கோரியும் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி உச்ச நீதிமன்றத்தில் அவசர மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார்.
இந்த அவசர மனுவை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கே.வி. விஸ்வநாதன் மற்றும் அலோக் அரேரா ஆகியோர் அடங்கிய அமர்வு, திமுக தரப்பிற்கு மிகக் கடுமையான கண்டனங்களைத் தெரிவித்தது. சிபிஐ மற்றும் காவல்துறையின் முதல் தகவல் அறிக்கையில் அமைச்சர்களின் பெயர்கள் மட்டுமே உள்ளதே தவிர, முதலமைச்சர் விஜய்யின் பெயர் எங்கும் இல்லை என்று சுட்டிக்காட்டிய நீதிபதிகள், அவரை எப்படிக் குற்றவாளி எனக் கூற முடியும் என்று கேள்வி எழுப்பினர். மேலும், 41 பேர் உயிரிழந்த துயரமான சம்பவத்தில் தேவையின்றி அரசியல் புகுத்த வேண்டாம் என்றும், நீதிமன்றத்தை அரசியல் மேடையாக மாற்றாமல் தங்களின் அரசியல் சண்டைகளை நீதிமன்றத்திற்கு வெளியே வைத்துக் கொள்ளுமாறும் காட்டமாக அறிவுறுத்தினர்.
பாதிக்கப்பட்ட ஏழை மக்களுக்கு முதலமைச்சர் நிவாரணமும் அரசு வேலையும் வழங்குவதைத் தங்களால் தடுக்க முடியாது என்று நீதிபதிகள் எச்சரித்ததால், தீர்ப்பு தங்களுக்குப் பாதகமாக வரும் என்பதை திமுக வழக்கறிஞர்கள் உணர்ந்துகொண்டனர். இதனால், அவர்கள் தங்களது இடைக்கால மனுவைத் திரும்பப் பெற்றுக் கொள்வதாக நீதிமன்றத்தில் முறையிட்டனர். இதனை ஏற்றுக்கொண்ட உச்ச நீதிமன்ற அமர்வு வழக்கை முழுமையாகத் தள்ளுபடி செய்தது. இந்த அதிரடித் தீர்ப்பின் மூலம், முதலமைச்சர் விஜய் வரும் 10-ஆம் தேதி கரூர் சென்று பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிகளை வழங்குவதிலிருந்த அனைத்துச் சட்டச் சிக்கல்களும் முற்றிலும் நீங்கியுள்ளன.
