“நள்ளிரவில் அரங்கேறிய கொடூரம்.. வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த மனைவி, தங்கையின் கழுத்தை அறுத்த கணவன்… பெங்களூரை உலுக்கிய பகீர் சம்பவம்”..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“நள்ளிரவில் அரங்கேறிய கொடூரம்.. வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த மனைவி, தங்கையின் கழுத்தை அறுத்த கணவன்… பெங்களூரை உலுக்கிய பகீர் சம்பவம்”..!!

Published

on

பெங்களூருவிலிருந்து 85 கி.மீ தொலைவில் உள்ள சிந்தாமணியின் ஜே.ஜே காலனியில், திங்கள்கிழமை அதிகாலை தனது மனைவி ஷாமா மற்றும் அவரது தங்கை ரேஷ்மா ஆகியோர் தூங்கிக்கொண்டிருந்தபோது, எஜாஸ் என்ற நபர் கத்தியால் கழுத்தை அறுத்து கொடூரமாகக் கொலை செய்துள்ளார். கோலார் குல்பேட்டையைச் சேர்ந்த எஜாஸ், அதிகாலையிலேயே மோட்டார் சைக்கிளில் சிந்தாமணிக்கு வந்து இக்கொலைகளைச் செய்துள்ளார். பின்னர், வீட்டில் இருந்த தனது மூன்று குழந்தைகளையும் அதே மோட்டார் சைக்கிளில் கோலாரில் உள்ள தனது வீட்டிற்கு அழைத்துச் சென்று விட்டுவிட்டு, காலை 8.30 மணியளவில் குல்பேட்டை காவல் நிலையத்தில் அவரே சரணடைந்தார்.

ஷாமா கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு தனது தாயாரின் இறுதிச் சடங்கில் பங்கேற்பதற்காகச் சிந்தாமணியில் உள்ள பெற்றோர் வீட்டிற்கு வந்துள்ளார். அதன் பிறகு அவர் கணவர் வீட்டிற்குத் திரும்பாததால் இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. குழந்தைகளுடன் கோலாருக்குத் திரும்பி வருமாறு எஜாஸ் பலமுறை வற்புறுத்தியும் ஷாமா வர மறுத்துள்ளார். இனிமேல் அவனுடன் வாழ விரும்பவில்லை என்று ஷாமா தனது குடும்பத்தினரிடம் தெரிவித்து அங்கேயே தங்கியதே இக்கொலைக்குக் முதன்மைக் காரணம் என்று சிக்கபள்ளாப்பூர் எஸ்பி குஷால் சௌஸ்கி தெரிவித்துள்ளார்.

Advertisement

எஜாஸ் மற்றும் ஷாமாவிற்கு திருமணமாகி 8 ஆண்டுகள் ஆன நிலையில், ஆரம்பத்திலிருந்தே இவர்களது திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கவில்லை என்று குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். அலமாரி மற்றும் தகரப் பொருட்களைப் பழுதுபார்க்கும் தொழில் செய்து வந்த எஜாஸ், மது மற்றும் சூதாட்டத்திற்கு அடிமையாகி ஷாமாவை அடிக்கடி துன்புறுத்தி வந்துள்ளார். ஊர்ப் பெரியவர்கள் பலமுறை பஞ்சாயத்து செய்து சமாதானம் பேசியும் அவரது அத்துமீறல்கள் தொடர்ந்ததோடு, ஷாமாவையும் அவரது சகோதரிகளையும் கொலை செய்துவிடுவேன் என்று எஜாஸ் பலமுறை மிரட்டியிருந்ததும் தெரியவந்துள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in