LATEST NEWS
“6 மாசத்துல ஆட்சி கவிழும்.. மீண்டும் ஸ்டாலின் தான் CM!”.. அனிதா ராதாகிருஷ்ணன் போட்ட வெடி.. தமிழக அரசியலில் திடீர் நிலநடுக்கம்..!!
இன்னும் ஆறு மாத காலத்தில் தற்போதைய தமிழக வெற்றிக் கழக ஆட்சி வீழ்ந்துவிடும் என்றும், அதன் பிறகு மு.க.ஸ்டாலின் மீண்டும் தமிழகத்தின் முதலமைச்சராகப் பொறுப்பேற்பார் என்றும் திமுகவின் மூத்த தலைவர் அனிதா ராதாகிருஷ்ணன் அதிரடியாகத் தெரிவித்துள்ளார். தூத்துக்குடியில் நடைபெற்ற கட்சி நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், ஆட்சி மாற்றத்திற்குப் பிறகு உதயநிதி ஸ்டாலின் கட்சியை வழிநடத்துவார் என்றும், திருச்சி சிவா போன்ற மூத்த தலைவர்கள் டெல்லியில் மத்திய அமைச்சர்களாகப் பொறுப்பேற்றுச் செயல்படுவார்கள் என்றும் தனது எதிர்கால அரசியல் கணிப்பை வெளிப்படுத்தினார். தவெக அரசுக்கு எதிராக அவர் முன்வைத்துள்ள இந்த ஆறு மாதக் கெடு அரசியல் வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதே சமயம், இந்த மேடையில் விசிகவின் முக்கிய நிர்வாகியான ஆதவ் அர்ஜூனாவை அனிதா ராதாகிருஷ்ணன் மிகக் கடுமையான வார்த்தைகளால் விமர்சித்துப் பேசியது பெரும் சர்ச்சையாக வெடித்துள்ளது. அவரை ஒரு ‘ரவுடி’ என்று குறிப்பிட்டதோடு, ‘அவன், இவன்’ என ஒருமையில் சாடிப் பேசிய அனிதா ராதாகிருஷ்ணனின் பேச்சுக்குக் கூட்டணிக் கட்சிகள் மத்தியிலேயே தற்பொழுது பலத்த எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன. தவெக அரசுக்கு எதிரான ஆட்சி மாற்றப் பேச்சு ஒருபுறமிருக்க, விசிக நிர்வாகிக்கு எதிரான இந்த அநாகரிகமான தனிநபர் தாக்குதல் சமூக ஊடகங்களிலும் அரசியல் தளத்திலும் கடுமையான விவாதங்களை உருவாக்கியுள்ளது.
