LATEST NEWS
கடன் முழுவதுமாக தள்ளுபடி.. காலையிலேயே வெளியான மகிழ்ச்சி செய்தி… தமிழக அரசு மாஸ் முடிவு..!!
பட்ஜெட் கூட்டத்தொடரில் பயிர்க்கடன் தள்ளுபடி வரம்பை ₹1.5 லட்சமாக உயர்த்த தவெக அரசு திட்டமிட்டுள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தற்பொழுது கூட்டுறவு வங்கிகளில் வழங்கப்பட்டுள்ள ₹1 லட்சம் வரையிலான கடன் தள்ளுபடி வரம்பை, ₹1.5 லட்சமாக உயர்த்தி முதலமைச்சர் விஜய் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. தமிழகத்தில் விவசாயிகளின் நலனைக் கருத்தில் கொண்டும், நிதிச் சுமையைக் குறைக்கும் நோக்கிலும் இந்த முக்கிய நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.
தமிழகத்தில் கடந்த சட்டமன்றத் தேர்தலின் போது தவெக அளித்த வாக்குறுதியின்படி, 5 ஏக்கர் வரையிலான நிலங்களை வைத்துள்ள சிறு மற்றும் குறு விவசாயிகளின் பயிர்க்கடன்களை முழுமையாகத் தள்ளுபடி செய்வதே அரசின் இறுதி இலக்காகும். இந்த இலக்கை எட்டும் பொருட்டு, வரும் 2029ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாகப் படிப்படியாகக் கடன் தள்ளுபடி வரம்பை உயர்த்த தவெக அரசு திட்டமிட்டுள்ளது. தற்போதைய பட்ஜெட் கூட்டத்தொடரில் வெளியாகவுள்ள இந்த அறிவிப்பு, விவசாயப் பெருங்குடி மக்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
