LATEST NEWS
சின்ன மீன் தான் சிக்கியிருக்கு.. இன்னும் பெரிய மீன் சிக்கல பாஸ்.. NTA-வில் 47 அதிகாரிகள் நீக்கம்.. கரப்பான் பூச்சி கட்சி அதிரடி..!!
தேசிய தேர்வு முகமையிலிருந்து 47 அதிகாரிகள் நீக்கப்பட்ட அதிரடி நடவடிக்கை குறித்து சி.ஜே.பி அமைப்பின் அபிஜீத் தீப்கே தனது எக்ஸ் தளத்தில் காரசாரமாக எதிர்வினையாற்றியுள்ளார். தற்போதைய இந்த அதிரடி நடவடிக்கை என்பது வெறும் ‘சின்ன மீன்களை’ மட்டுமே பிடிப்பதற்குச் சமம் என்றும், இந்த முறைகேடுகளுக்குக் காரணமான ‘பெரிய மீன்கள்’ இன்னும் சிக்காமல் தப்பித்துக் கொண்டிருக்கிறார்கள் என்றும் அவர் தனது பதிவின் மூலம் மறைமுகமாகக் குற்றம் சாட்டியுள்ளார்.
தேர்வு முறைகேடுகள் மற்றும் வினாத்தாள் கசிவு புகார்கள் காரணமாக தேசிய தேர்வு முகமை கடும் விமர்சனங்களைச் சந்தித்து வரும் நிலையில், இந்த 47 அதிகாரிகளின் நீக்கம் என்பது வெறும் ஆரம்பக்கட்ட கண் துடைப்பு நடவடிக்கை மட்டுமே என்பதை அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இந்த விவகாரத்தில் முறைகேடுகளின் பின்னணியில் இருக்கும் முக்கியப் புள்ளிகள் மற்றும் உயர் அதிகாரிகள் மீது இன்னும் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்பதே இவருடைய பதிவின் முக்கிய நோக்கமாக உள்ளது.
முன்னதாக, நாடு முழுவதும் வெடித்த மாணவர் போராட்டங்களின் காரணமாக, மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானின் ராஜினாமாவை வலியுறுத்தி எதிர்க்கட்சிகளும் மாணவர் அமைப்புகளும் கடுமையான அழுத்தத்தைக் கொடுத்து வந்தன. இதுதொடர்பான நாடாளுமன்ற விவாதங்களின்போது, இந்த விவகாரம் குறித்து முழுமையாகப் பதிலளிக்கவும் அமைச்சர் தர்மேந்திர பிரதானின் ராஜினாமா குறித்த இறுதி முடிவுக்காகவும் நாளை வரை தங்களுக்குக் கால அவகாசம் வேண்டும் என மத்திய அரசு கோரியிருந்தது இங்கு குறிப்பிடத்தக்கது.
