LATEST NEWS
அதிர்ச்சி மேல் அதிர்ச்சி..! வயிற்றுக்குள் புகுந்த கரப்பான் பூச்சி… அதைக்கொல்ல பெண் செய்த விபரீத செயல்… அவசர சிகிச்சைப் பிரிவில் நடந்த பேரதிர்ச்சி..!!
சீனாவைச் சேர்ந்த பெண் ஒருவர் எதிர்பாராதவிதமாக கரப்பான் பூச்சி ஒன்றை முழுங்கிவிட்டார். அது வயிற்றுக்குள் உயிருடன் இருந்துவிடுமோ என்ற பயத்திலும் பதற்றத்திலும், அதை உடனடியாகக் கொல்ல வேண்டும் என்ற தவறான எண்ணத்தில் பூச்சிக்கொல்லி மருந்தினை தன் வாயில் தெளித்து விழுங்கினார்.
https://twitter.com/abo3hjkd/status/2094480098837864687/video/1
கரப்பான் பூச்சியை விட அவர் உட்கொண்ட வீரியமிக்க பூச்சிக்கொல்லி மருந்து அவரது உடலுக்குப் பலத்த சேதத்தை ஏற்படுத்தியது. சிறிது நேரத்திலேயே அப்பெண்ணிற்கு மிகக் கடுமையான உடல்நலக் குறைவு ஏற்பட்டு ஆபத்தான நிலையை எட்டியதை அடுத்து, அவர் உடனடியாக மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.
அப்பெண்ணின் நிலைமையைக் கண்டு மருத்துவர்கள் அதிர்ச்சியடைந்தனர். ஒரு சிறிய பிரச்சினையைக் கண்டு ஏற்படும் பயமும் பதற்றமும், அந்தப் பிரச்சினையை விட மிகவும் ஆபத்தான மற்றும் உயிருக்கே உலைய வைக்கும் தவறான முடிவை எடுக்க வைத்துவிடும் என்பதற்கு இந்தச் சம்பவம் ஒரு எச்சரிக்கையான உதாரணமாக அமைந்தது.
