LATEST NEWS
ஆட்டம் இப்பதான் ஆரம்பம்..! தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்திருந்தாலும்.. இன்னும் போராட்டம் தொடரும்… டுவிஸ்ட் வைத்த கரப்பான் பூச்சி கட்சி..!!
மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தனது பதவியை ராஜினாமா செய்திருந்தாலும், தங்களின் முக்கிய 2 கோரிக்கைகள் நிறைவேறும் வரை போராட்டம் தொடரும் என்று சிஜேபி நிறுவனர் அபிஜீத் திப்கே திட்டவட்டமாக அறிவித்துள்ளார். நீட் தேர்வு முறைகேடுகளுக்கு எதிராக மாணவர்கள் மற்றும் அமைப்புகள் தொடர்ந்து குரல் எழுப்பி வரும் நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
நீட் தேர்வு ரத்தால் மனமுடைந்து தற்கொலை செய்துகொண்ட மாணவர்களின் குடும்பங்களுக்குத் தலா 1 கோடி ரூபாய் இழப்பீடு வழங்கப்பட வேண்டும் என்பது அவர்களின் முதல் கோரிக்கையாக உள்ளது. பாதிக்கப்பட்ட மாணவர்களின் குடும்பங்களுக்குத் தகுந்த நீதி கிடைக்க வேண்டும் என்பதில் போராட்டக்காரர்கள் உறுதியாக உள்ளனர்.
மேலும், போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீது அராஜகமாக வன்முறையை ஏவிவிட்ட காவல்துறையினர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் வரை தங்களது போராட்டத்தைக் கைவிடப் போவதில்லை என்றும் அவர் கூறியுள்ளார். தர்மேந்திர பிரதானின் ராஜினாமாவைத் தாண்டியும் மாணவர்களின் உரிமைகளுக்காகப் போராட்டம் தீவிரமடையும் என்பதை இந்த அறிக்கை தெளிவுபடுத்துகிறது.
