LATEST NEWS
காலை வரை மங்கள இசை… இரவில் மரண ஓலம்…! முதலிரவு படுக்கையில் புதுமாப்பிள்ளைக்கு… நடந்த திடுக்கிடும் கொடூரம்..!!
பதாயூன் மாவட்டம், உகைதி காவல் எல்லைக்குட்பட்ட ரியோனாய் கிராமத்தைச் சேர்ந்த பப்ளு மௌரியா என்பவருக்கும், லோஹர்புரா கிராமத்தைச் சேர்ந்த ரஷ்மி என்பவருக்கும் அண்மையில் திருமணம் நடைபெற்றது. திருமணத்திற்குப் பிறகு மணப்பெண்ணை அழைத்துக் கொண்டு புதுமணத் தம்பதியர் இல்லத்திற்கு வந்து சேர்ந்தனர். நாள் முழுதும் உறவினர்களின் வருகையாலும், பாரம்பரிய வரவேற்புச் சடங்குகளாலும் வீடு முழுவதும் மகிழ்ச்சியும் உற்சாகமும் நிறைந்திருந்தது.
பாரம்பரிய வழக்கப்படி, முதலிரவுக்காக புதுமணத் தம்பதியருக்கு அறையின் தரையில் படுக்கை அமைக்கப்பட்டிருந்தது. அனைவரும் உறங்கச் சென்ற நிலையில், நள்ளிரவில் தூங்கிக் கொண்டிருந்த பப்ளுவின் கழுத்துப் பகுதியில் கொடிய விஷமுள்ள பாம்பு ஒன்று தீண்டியது. விடியற்காலையில் அவரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதைக்கண்டு அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் உடனடியாக அவரை மீட்டு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.
மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக அறிவித்த போதிலும், அதை ஏற்றுக்கொள்ள முடியாத குடும்பத்தினர் நம்பிக்கை இழக்காமல் அவரை வேறு மருத்துவமனைகளுக்கும் அழைத்துச் சென்றனர். ஆனால் அங்கேயும் அவர் இறந்தது உறுதி செய்யப்பட்டது. உடற்கூறாய்வுக்கு ஒப்புக்கொள்ளாத குடும்பத்தினர், அவரது உயிர் மீண்டு வரும் என்ற நம்பிக்கையில் சாமியார்கள் மற்றும் பாம்பாட்டிகளிடம் அழைத்துச் சென்று மாலை வரை மாந்திரீகச் சடங்குகளைச் செய்தனர். இச்சம்பவத்தால் புதுப்பெண் மீள முடியாத அதிர்ச்சியில் மூழ்கியுள்ளார்.
