LATEST NEWS
அடச்சீ.. இவரெல்லாம் ஒரு போலிஸா..? அக்காவுக்கு சாப்பாடு கொடுக்கப்போன சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்.. ரோந்து போலிஸின் வெறி செயல்… CCTV-யில் சிக்கிய அந்த ஒரு வீடியோ.. நெஞ்சை உலுக்கும் பின்னணி..!!
உத்தரப் பிரதேச மாநிலத்தில் மக்களுக்காகச் செயல்பட வேண்டிய அவசர உதவி ரோந்துப் பிரிவு காவலரே 10 வயது சிறுமியைப் படுகொலை செய்த சம்பவம் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. மருத்துவமனையில் உள்ள அக்காவுக்கு உணவு வழங்கிவிட்டு தனியாகத் திரும்பிய சிறுமியை, பாதுகாப்பு தருவதாகக் கூறி மோட்டார் சைக்கிளில் ஏற்றிச் சென்ற காவலர் அபிஷேக் யாதவ், ஆள்நடமாட்டமில்லாத பகுதிக்கு அழைத்துச் சென்று கொடூரமாகக் கொலை செய்து உடலை ராப்தி நதியில் வீசியுள்ளார். ஜூலை 28 அன்று நடந்த இந்த அநீதி காவல்துறை மீதான நம்பிக்கையை உலுக்கியுள்ளது.
காணாமல் போன சிறுமியைத் தேடி ஈ-ரிக்ஷா ஓட்டுநரான தந்தை அளித்த புகாரின் பேரில், சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த காவல்துறையினர், சீருடையில் இருந்த காவலர் அபிஷேக் யாதவை அடையாளங்கண்டு அதிரடியாகக் கைது செய்தனர். விசாரணையில் அவர் குற்றத்தை ஒப்புக்கொண்டதைத் தொடர்ந்து சிறுமியின் உடல் மீட்கப்பட்டதுடன், மருத்துவப் பரிசோதனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட குற்றவாளிக்கு ஆத்திரமடைந்த பொதுமக்கள் தர்மஅடி கொடுத்தனர். மக்களைப் பாதுகாக்க வேண்டிய காவலரே இத்தகைய கொடூரச் செயலில் ஈடுபட்டது பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், அவரைப் பணியிலிருந்து நிரந்தரமாக நீக்குவதற்கான நடவடிக்கைகள் தீவிரமாகத் தொடங்கப்பட்டுள்ளன.
