CRIME
பகீர்..! பழிவாங்க வாளுடன் புகுந்த முன்னாள் வாடகைதாரர்.. விரல்களைத் துண்டித்து, நடுவீட்டில் அரங்கேறிய வெறிச்செயல்.. குலைநடுங்க வைக்கும் சம்பவம்…!!
நாக்பூர் மாவட்டம் அமர் நகரில் உள்ள MIDC காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில், கடந்த செவ்வாய்க்கிழமை காலை ஒரு வருடப் பகை காரணமாக முன்னாள் வாடகைதாரர் ஒருவர் தன் முன்னாள் நில உரிமையாளரின் வீட்டிற்குள் வாள் மற்றும் கத்தியுடன் புகுந்து பயங்கரத் தாக்குதலில் ஈடுபட்டார். இச்சம்பவத்தில் சங்கீதா சௌத்ரி என்ற பெண் பரிதாபமாக உயிரிழந்தார். வீட்டின் உரிமையாளரான தர்மபால் தஹாத் மற்றும் அவரது மனைவி வனிதா ஆகியோர் படுகாயமடைந்தனர். வாடகை வீட்டில் தங்கியிருந்தபோது ஏற்பட்ட தகராறுகள் மற்றும் அவமானம் காரணமாக, ரோஷன் தாரல் என்ற அந்த நபர் இந்த வெறிச்செயலில் ஈடுபட்டதாகப் போலீஸார் தெரிவித்தனர்.
A year-old grudge allegedly culminated in a brutal attack when a former tenant armed with a sword and knife stormed his ex-landlord’s house in Amar Nagar under MIDC police station limits on Tuesday morning.
The violent assault left one woman dead and an elderly couple seriously… https://t.co/QJU4ACm9KO pic.twitter.com/I3hvxmtUCp— Hate Detector 🔍 (@HateDetectors) July 29, 2026
சம்பவத்தன்று காலை 9 மணியளவில் பையில் வாள் மற்றும் கத்தியை மறைத்து எடுத்துவந்த ரோஷன் தாரல், தர்மபாலையும் அவரது மனைவியையும் தாக்கியுள்ளார். தர்மபால் கைப்பேசியைப் பயன்படுத்திக் கொண்டிருந்தபோது அவரைத் தாக்கியதில் அவரது விரல்கள் துண்டிக்கப்பட்டதோடு முகத்திலும் படுகாயம் ஏற்பட்டது. சத்தம் கேட்டு சமையலறையில் இருந்து ஓடிவந்த வனிதாவையும் அவர் கத்தியால் தாக்கினார். அந்த நேரத்தில் அங்கு வந்த சங்கீதா சௌத்ரி மீது வாளால் தாக்குதல் நடத்தியதில், அவரது கழுத்து அறுபட்டு வீட்டின் வெளியே சாலையில் சரிந்து பரிதாபமாக உயிரிழந்தார்.
தாக்குதலுக்குப் பிறகு தப்பிக்க முயன்ற குற்றவாளியை அப்பகுதி இளைஞர்கள் மற்றும் அக்கம் பக்கத்தினர் வெளியே பூட்டிப் பொறியில் சிக்க வைத்தனர். விரைந்து வந்த MIDC காவல்துறையினர் வீட்டின் கதவை உடைத்து ரோஷன் தாரலைக் கைது செய்தனர். படுகாயமடைந்த தம்பதியினர் வனடோங்கரியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவம் தொடர்பாகக் கொலை மற்றும் கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்யப்பட்டு தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.
