CRIME
‘குடும்பத் தகராறின் உச்சக்கட்டம்.. கணவனின் கண்ணில் மிளகாய்ப் பொடி தூவி..” இரக்கமே இல்லாமல் மனைவி, மகன் செய்த கொடூரம்.. நடுங்க வைக்கும் பின்னணி..!!
தெலுங்கானா மாநிலம் மேடக் மாவட்டம் தூப்ரான் மண்டலம் இஸ்லாம்பூர் கிராமத்தில், குடும்பத் தகராறு காரணமாகக் கணவனின் கண்ணில் மிளகாய்ப் பொடியைத் தூவி, கிரானைட் கல்லால் தலையை நசுக்கிக் கொடூரமாகக் கொலை செய்த மனைவி மற்றும் மகனின் கொடூரச் செயல் அப்பகுதியில் பெரும் நடுக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. கொண்டாப்பூர் ஸ்ரீராமுலு (48) என்பவரே இவ்வாறு அவரது குடும்பத்தினராலேயே படுகொலை செய்யப்பட்ட துரதிர்ஷ்டசாலி ஆவார். நீண்ட நாட்களாக நிலவி வந்த குடும்பப் பூசல் காரணமாக, ஸ்ரீராமுலுவின் மனைவி சபிதா மற்றும் அவரது மகன் பாரத் ஆகியோர் இணைந்து இந்த பயங்கரத் திட்டத்தைத் தீட்டியுள்ளனர்.
திட்டத்தின்படி, ஸ்ரீராமுலுவின் கண்ணில் திடீரென மிளகாய்ப் பொடியைத் தூவிய அவர்கள், நிலைகுலைந்து நின்ற அவரை மரக்கட்டையால் சராமாரியாகத் தாக்கியுள்ளனர். அப்படியும் அவர் உயிர் பிரியாமல் துடிப்பதைக் கண்டு, இரக்கமே இல்லாமல் ஒரு கனமான கிரானைட் கல்லை எடுத்து அவரது தலையில் போட்டு நசுக்கிக் கொடூரமாகக் கொன்றுள்ளனர். இந்த அதிர்ச்சியூட்டும் கொலைச் சம்பவத்தை முடித்த கையோடு, குற்றவாளிகளான மனைவி சபிதா மற்றும் மகன் பாரத் ஆகிய இருவரும் நேராகத் தூப்ரான் காவல் நிலையத்திற்குச் சென்று போலீசாரிடம் சரணடைந்தனர். தற்போது போலீஸார் உடலைக் கைப்பற்றிப் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்துவிட்டு, இக்கொலை குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
