LATEST NEWS
அடச்சீ கொஞ்சம்கூட அறிவே இல்லையா..? விமானத்தில் கணவனுக்கு தாய்ப்பால் கொடுத்த மனைவி… தம்பதிக்கு வாழ்நாள் தடை விதித்த டெல்டா ஏர்லைன்ஸ்..!!
அமெரிக்காவின் அட்லாண்டாவில் இருந்து புறப்பட்ட டெல்டா ஏர்லைன்ஸ் விமானத்தில், சக பயணிகளுக்கு முன்னால் கணவனுக்கு மனைவி தாய்ப்பால் கொடுத்ததாகக் கூறப்படும் அதிர்ச்சியூட்டும் சம்பவம் சமூக வலைதளங்களில் காட்டுத்தீயாகப் பரவி வருகிறது.டெல்டா ஏர்லைன்ஸ் விமானத்தில் பயணித்த லாரன் மிட்செல் மற்றும் எரிக் மிட்செல் தம்பதியரே இந்த விசித்திரமான மற்றும் அநாகரிகமான செயலில் ஈடுபட்டுள்ளனர். இவர்களின் இத்தகைய செயலால் அருகில் இருந்த பயணிகள் கடும் அசௌகரியத்திற்கு உள்ளாகி, தங்களின் இருக்கைகளை மாற்றக் கோரியதை அடுத்து இச்சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
விமானப் பணிப்பெண்கள் நேரில் சென்று பார்த்தபோது, மனைவி லாரன் தனது ஆடையை உயர்த்தி கணவரின் தலையை மூடியவாறு தாய்ப்பால் கொடுப்பது போன்ற நிலையில் இருந்ததாகத் தெரிவித்துள்ளனர். சக பயணிகள் மற்றும் ஊழியர்களின் புகாரைத் தொடர்ந்து, நடுவானில் அநாகரிகமாக நடந்துகொண்ட அந்த தம்பதியினர் உடனடியாக விமானத்தில் இருந்து இறக்கிவிடப்பட்டனர். மேலும், பொது அமைதிக்குக் குந்தகம் விளைவித்த காரணத்திற்காக, அவர்கள் இனி தங்கள் நிறுவன விமானங்களில் பயணிக்க டெல்டா ஏர்லைன்ஸ் நிர்வாகம் அதிரடியாக வாழ்நாள் தடை விதித்துள்ளது.
பொது இடங்கள் மற்றும் நூற்றுக்கணக்கான பயணிகள் பயணிக்கும் விமானம் போன்ற மூடிய சூழல்களில் எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும் என்ற குறைந்தபட்ச ஒழுக்கமும் சமூகப் பொறுப்பும் இல்லாமல் இந்த தம்பதியினர் நடந்துகொண்ட விதம் இணையவாசிகளிடையே கடும் கண்டனங்களை எழுப்பியுள்ளது. தாய்ப்பால் கொடுப்பது என்பது ஒரு குழந்தையின் பசியைத் தீர்க்கும் உன்னதமான இயற்கை நிகழ்வு என்றாலும், அதனை இவ்வாறான முறையில் தவறாகப் பயன்படுத்தியது அநாகரிகத்தின் உச்சம் எனப் பலரும் சமூக வலைதளங்களில் தங்களது அதிருப்தியை வெளிப்படுத்தி வருகின்றனர்.
