LATEST NEWS
விஜய் ஆட்சியை கவிழ்க்க விடமாட்டேன்… அப்படி நினைத்தால் என்ன நடக்கும் தெரியுமா..? திமுகவுக்கு கடும் எச்சரிக்கை விடுத்த வைகோ..!!
திமுகவை மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கடுமையாக விமர்சித்துப் பேசியுள்ளார். “ஆட்சி போய்விட்டதே, இனி கமிஷன், பணம் குவியும் வாய்ப்பு இல்லை என சிலரால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை” என்று அவர் சாடியுள்ளார். தங்களுக்குக் கமிஷன் தொகை மற்றும் பணம் குவியும் வாய்ப்புகள் பறிபோன ஆத்திரத்தில் சிலர் இவ்வாறு பேசி வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
முதலமைச்சர் விஜய்யின் ஆட்சியைத் தமிழ்நாட்டில் கவிழ்க்கும் முயற்சிகள் எதுவாக இருந்தாலும் அதனைத் தான் ஒருபோதும் அனுமதிக்க மாட்டேன் என்று வைகோ திட்டவட்டமாகக் கூறியுள்ளார். தமிழக வெற்றிக் கழகத்திற்கு ஏதேனும் ஆபத்து அல்லது அச்சுறுத்தல் ஏற்பட்டால், அதனைத் தடுக்கும் முன்னணிப் போர் வாளாகத் தான் இருப்பேன் என்றும் அவர் உறுதிபடத் தெரிவித்துள்ளார்.
திமுகவினர் வீண் பகல் கனவு காண்பதை நிறுத்திக் கொள்ள வேண்டும் என எச்சரித்த வைகோ, தவெக அரசுக்கு எவ்வித பாதிப்பும் வராமல் காப்பேன் என்றார். மேலும், தன் மீது தொடுக்கப்படும் ஆயிரம் தாக்குதல்களையும் தாங்கும் நெஞ்சம் தனக்கு இருப்பதாக ஆவேசமாகப் பேசியுள்ளார்.
