LATEST NEWS
“துணை, இணை பொறுப்பெல்லாம் எனக்கு வேண்டாம்..!” ஸ்டாலினிடம் நேரடியாக கனிமொழி போட்ட கண்டிஷன்.. திகைப்பில் சீனியர்கள்.. அறிவாலயத்தில் பரபரப்பு..!!
திமுக-வில் தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் மெகா உட்கட்சி அமைப்பு ரீதியான மாற்றங்களுக்கு மத்தியில், தனக்குத் துணை அல்லது இணைப் பொறுப்புகள் ஏதுமின்றி முற்றிலும் சுதந்திரமான, அதிகாரமிக்க புதிய பதவி ஒன்றை வழங்க வேண்டும் எனத் தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கட்சித் தலைமையிடம் வலியுறுத்தியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. அண்மையில் நடைபெற்ற செயற்குழு கூட்டத்தில் வயது வரம்பு மற்றும் 110 புதிய மாவட்டப் பிரிப்புகள் போன்ற அதிரடி நிர்வாகச் சீர்திருத்தங்கள் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, கட்சியில் தனக்கான தனித்துவமான அடையாளத்தை வலுவாக நிலைநிறுத்த கனிமொழி முயன்று வருவதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தலைமைக்கு அடுத்தபடியாக முடிவெடுக்கும் அதிகாரமுள்ள ஒரு முக்கியப் பொறுப்பைத் தனக்கு ஒதுக்க வேண்டும் என்பதில் அவர் உறுதியாக இருப்பதாக அறிவாலய வட்டாரங்கள் கூறுகின்றன.
இவற்றுடன், திமுக-வின் ஒட்டுமொத்தக் கட்சிப் பொறுப்புகளிலும் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு கட்டாயமாக வழங்கப்பட வேண்டும் என்ற மிக முக்கியமான அறிவுறுத்தலையும் கனிமொழி கட்சித் தலைமைக்கு முன்வைத்துள்ளார். அடிமட்டக் கிளைக் கழகம் முதல் தலைமைச் செயற்குழு வரை அனைத்து நிலைகளிலும் பெண்களுக்கு உரிய பிரதிநிதித்துவம் வழங்கப்பட வேண்டும் என்றும், அதன் மூலமே கட்சியின் வாக்கு வங்கியை அடிமட்டம் வரை வலுப்படுத்த முடியும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். கனிமொழியின் இந்த அதிரடி கோரிக்கைகள் மற்றும் பெண்களுக்கான 33 சதவீதப் பொறுப்பு குறித்த இந்த அறிவுறுத்தல், கட்சியின் அடுத்தகட்ட பவர் மாற்றத்தில் பெண்களின் ஆதிக்கத்தை அதிகரிக்கச் செய்யும் ஒரு புதிய அரசியல் நகர்வாகப் பார்க்கப்படுகிறது.
