LATEST NEWS
இதுக்காகத்தான் கேட்டேன்..! எம்.எல்.ஏ கார் சர்ச்சைக்கு… சட்டமன்றத்தில் முற்றுப்புள்ளி வைத்த விசிக ஜோதிமணி..!!
தன்னிடம் சொந்தமாகக் கார் இருந்தும் MLA-க்களுக்குக் கார் வழங்க வேண்டும் என ஏன் கோரிக்கை வைத்தேன் என்பது குறித்து விசிகவைச் சேர்ந்த ஜோதிமணி பேரவையில் விளக்கம் அளித்துள்ளார். தான் வைத்த கோரிக்கைக்கான காரணத்தைத் தெளிவாகக் கூறிய அவர், சட்டமன்றத்தில் இது தொடர்பாகத் தன்னிடம் இருந்த சூழ்நிலையை விளக்கிப் பேசினார்.
அவர் பேசுகையில், “என்னிடம் இருக்கும் காரை வாங்கி 15 ஆண்டுகள் ஆகிவிட்டன. தற்போது அது பயன்பாட்டில் இல்லை. மேலும், புதிதாக லோன் போட்டு கார் வாங்க ஆசையாக இருக்கிறது. ஆனால், எனக்கு 70 வயதாகிவிட்டதால் வங்கியில் லோன் தர மறுக்கிறார்கள். அதனால்தான் புதிய கார் வழங்குமாறு கோரிக்கை வைத்தேன்” எனக் கூறினார்.
