LATEST NEWS
தமிழ்நாடு கடன்ல இருக்கு.. திமுக MLA-க்களுக்கு கார் வேண்டாம் முதலமைச்சரே.. உதயநிதி ஸ்டாலினின் பரபரப்பு முடிவு..!!
தமிழ்நாடு சட்டப்பேரவையில் ஆளுங்கட்சிக்கும் எதிர்க்கட்சிக்கும் இடையே விவாதங்கள் நீடித்து வரும் நிலையில், மாநிலத்தின் நிதிநிலையைக் காரணம் காட்டி எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் அதிரடியான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் பேசிய அவர், “தமிழ்நாடு தற்போது கடுமையான கடன் சுமையில் இருப்பதாக முதலமைச்சர் தொடர்ந்து கூறி வருகிறார்; அரசின் இந்த நிதி நெருக்கடியைக் கருத்தில் கொண்டு, மக்கள் பணத்தைச் சேமிக்கும் நோக்கில் திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் தங்களுக்கு வழங்கப்பட வேண்டிய அரசு காரைப் பயன்படுத்தப் போவதில்லை என ஒருமனதாக முடிவு எடுத்துள்ளோம்” என்று தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய உதயநிதி ஸ்டாலின், இந்த முடிவு அரசாங்கத்தின் நிதிச் சுமையைக் கணிசமாகக் குறைக்க உதவும் என்று சுட்டிக்காட்டினார். மாநிலத்தின் பொருளாதாரச் சூழலைச் சீரமைக்க அரசு முன்னெடுக்கும் முயற்சிகளுக்குத் தங்களின் இந்த கார் மறுப்பு முடிவு ஒரு ஆக்கப்பூர்வமான பங்களிப்பாக இருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார். எதிர்க்கட்சித் தலைவரின் இந்தத் திடீர் மற்றும் வியப்பூட்டும் அறிவிப்பு சட்டப்பேரவையில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியதோடு, அரசியல் வட்டாரத்தில் தற்போதைய மிக முக்கிய விவாதப் பொருளாக மாறியுள்ளது.
