யாரும் கண்டிராத காட்டிற்குள் நடந்த அபூர்வம்..! புதரில் இருந்து திடீரென வெளியே வந்த தாய் புலியும் குட்டிகளும்.. மெய் சிலிர்க்க வைக்கும் வைரல் வீடியோ..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

யாரும் கண்டிராத காட்டிற்குள் நடந்த அபூர்வம்..! புதரில் இருந்து திடீரென வெளியே வந்த தாய் புலியும் குட்டிகளும்.. மெய் சிலிர்க்க வைக்கும் வைரல் வீடியோ..!!

Published

on

மகாராஷ்டிராவில் உள்ள தடோபா-அந்தாரி புலிகள் காப்பகத்தில் நடைபெற்ற ஒரு அபூர்வ மற்றும் மனதை நெகிழ வைக்கும் சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ஜூலை 15 அன்று, தனது குடும்பத்துடன் வன உலா சென்ற அன்குஷ் ஜிஜில்வார் என்பவர், ‘சோட்டி மது’ என்ற பெண் புலியையும் அதன் குட்டிகளையும் நேரில் பார்க்கும் அரிய வாய்ப்பைப் பெற்றார்.

மாலை சுமார் 7:03 மணியளவில், அடர்ந்த புதர்களிலிருந்து ‘சோட்டி மது’ என்ற பெண் புலி மெதுவாக வெளியே வந்தது. அதைத் தொடர்ந்து, அதன் சிறிய குட்டிகளும் ஒன்றன்பின் ஒன்றாக புதரில் இருந்து வெளியே வந்தன. தாய் புலி கம்பீரமாக முன்னால் நடந்து செல்ல, அதன் குட்டிகள் பின்னாலேயே நடந்து சென்ற இந்தக் காட்சி, அங்கு வாகனங்களில் நின்றிருந்த சுற்றுலாப் பயணிகளைப் பெரிதும் ஆச்சரியத்திலும் பரவசத்திலும் ஆழ்த்தியது.

Advertisement

https://www.instagram.com/reel/DbZ6K4Qsqgu/?utm_source=ig_web_button_share_sheet

இந்த அற்புதமான காட்சியை அன்குஷ் தனது கேமராவில் பதிவு செய்து சமூக வலைதளங்களில் பகிர்ந்த நிலையில், இந்த வீடியோ இணையவாசிகளிடையே பலத்த வரவேற்பைப் பெற்று வைரலாகி வருகிறது. இதைப் பார்த்த நெட்டிசன்கள் பலரும் தங்களுக்கு மெய்சிலிர்க்கும் அனுபவத்தைத் தருவதாகக் கருத்து தெரிவித்து வருகின்றனர். அதே வேளையில், இதுபோன்ற இரவு அல்லது அந்தி வேளையிலான வனவிலங்கு சந்திப்புகளின் போது விலங்குகளுக்கு இடையூறு ஏற்படாதவாறு வாகனங்களின் விளக்குகளை அணைப்பது போன்ற விழிப்புணர்வைப் பின்பற்ற வேண்டும் என்றும் வனவிலங்கு ஆர்வலர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in