“தவெக ஆதரவு எங்களுக்குத்தான் வேண்டும்…” புஸ்ஸி ஆனந்தை நேரில் சந்தித்து காங்கிரஸ் போட்ட மாஸ் பிளான்..! பரபரப்பு பின்னணி..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“தவெக ஆதரவு எங்களுக்குத்தான் வேண்டும்…” புஸ்ஸி ஆனந்தை நேரில் சந்தித்து காங்கிரஸ் போட்ட மாஸ் பிளான்..! பரபரப்பு பின்னணி..!!

Published

on

இந்திய தேர்தல் ஆணையம் இந்தியா முழுவதும் 5 சட்டமன்ற தொகுதிகளுக்கும், ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் அக்டோபர் 6-ம் தேதி இடைத்தேர்தல் அறிவித்துள்ளது. இதில் தமிழ்நாட்டின் மதுராந்தகம், தாராபுரம் மற்றும் புதுச்சேரியின் தட்டாஞ்சாவடி உள்ளிட்ட சட்டமன்ற தொகுதிகள் அடங்கும். இடைத்தேர்தல் அறிவிப்பைத் தொடர்ந்து தமிழ்நாட்டிலும் புதுவையிலும் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு, வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு தேர்தல் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் தட்டாஞ்சாவடி இடைத்தேர்தலுக்கு ஆதரவுக்கோரி த.வெ.க.விடம் இந்திய தேசிய காங்கிரஸ் கடிதம் வழங்கியுள்ளது. தவெக தலைமை அலுவலகத்தில் இன்று அக்கட்சியின் பொதுச்செயலாளரும், அமைச்சருமான புஸ்ஸி ஆனந்தை சந்தித்து புதுச்சேரி காங்கிரஸ் தலைவர் வைத்திலிங்கம் மற்றும் முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி ஆகியோர் இக்கடிதத்தை வழங்கினர்.

Advertisement

தட்டாஞ்சாவடியில் காங்கிரஸ் சார்பில் விநாயகம் நிறுத்தப்பட்டுள்ளார். முதலமைச்சர் ரங்கசாமி நின்று வெற்றிப் பெற்ற அத்தொகுதியில் என்.ஆர்.காங்கிரஸ் சார்பில் அசோக் ஆனந்த் போட்டியிடுகிறார். காங்கிரஸ் ஆதரவுக் கோரியுள்ள நிலையில், தவெக புதுச்சேரியில் போட்டியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in