LATEST NEWS
“கம்யூனிஸ்ட்டுகள் இல்லைனா என்ன..?!” கூட்டணியில் இருந்து CPI வெளியேறியதும் முதல்வர் விஜய் எடுத்த ‘அந்த’ அதிரடி முடிவு… அதிரும் அரசியல் களம்..!!
தாராபுரம் மற்றும் மதுராந்தகம் சட்டமன்ற இடைத்தேர்தலில் தமிழக வெற்றிக் கழகத்திற்கு ஆதரவில்லை என இந்திய கம்யூனிஸ்ட் கட்சிஅதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ள நிலையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் தனது இறுதி முடிவை இன்று அறிவிக்கவுள்ளதாகத் தெரிவித்துள்ளது. இத்தகைய அரசியல் சூழலில், வரவிருக்கும் இடைத்தேர்தலில் இரண்டு தொகுதிகளிலும் தவெக தனித்து நின்று களம் கண்டு மாபெரும் வெற்றி பெற்றால், கம்யூனிஸ்ட்டுகளின் தயவோ அல்லது ஆதரவோ இன்றி வரும் காலங்களில் சுமுகமாக ஆட்சியை நடத்தலாம் என முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் திட்டவட்டமாகக் கருதுவதாக அறிவாலய மற்றும் தவெக உள்வட்டாரத் தகவல்கள் கசிகின்றன.
கம்யூனிஸ்ட் கட்சிகளின் இத்தகைய திடீர் விலகல் முடிவுகளுக்குப் பின்னால் தவெக-வின் தன்னிச்சையான அதிகாரப் போக்குதான் காரணம் என்று அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். தவெக தலைமையிலான கூட்டணியில் தங்களுக்கு உரிய முக்கியத்துவமும், தொகுதிப் பங்கீட்டில் வெளிப்படைத்தன்மையும் மறுக்கப்பட்டதால்தான் கம்யூனிஸ்ட்டுகள் இந்த இடைத்தேர்தல் களத்தில் தவெக கூட்டணியை விட்டு முற்றிலுமாக விலகியிருப்பதாகப் பரவலாகப் பேசப்படுகிறது. தமிழக இடைத்தேர்தல் களம் அனல் பறக்கும் இந்த வேளையில், கம்யூனிஸ்ட்டுகளின் இந்த அதிரடி முடிவுகள் தவெக அரசின் 100 நாள் மக்கள் மதிப்பீட்டு வாக்குகளைப் பாதிக்குமா அல்லது விஜய் நினைப்பது போல் தவெக-வின் தனித்த செல்வாக்கை நிரூபிக்க ஒரு நல்வாய்ப்பாக அமையுமா என்ற காரசாரமான விவாதம் தமிழக அரசியல் அரங்கில் தற்பொழுது வெடித்துள்ளது.
