கடைசி தேதி அறிவிப்பு… அக்.31-க்குள் இதை செய்யாவிட்டால் சிக்கல்..? அரசு ஊழியர்களுக்கு தமிழ்நாடு அரசு அதிரடி கெடு..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

கடைசி தேதி அறிவிப்பு… அக்.31-க்குள் இதை செய்யாவிட்டால் சிக்கல்..? அரசு ஊழியர்களுக்கு தமிழ்நாடு அரசு அதிரடி கெடு..!!

Published

on

தமிழ்நாடு அரசு ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் அனைவரும் தங்களின் சொத்து மற்றும் கடன் விவரங்களை வரும் அக்டோபர் 31-ஆம் தேதிக்குள் கட்டாயம் தாக்கல் செய்ய வேண்டும் என்று தமிழ்நாடு அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. கடந்த ஜனவரி மாதம் மேற்கொள்ளப்பட்ட சட்டத் திருத்தத்தின் தொடர்ச்சியாக, இந்த விவரங்களை தாக்கல் செய்வதற்கான காலக்கெடு மற்றும் நடைமுறைகள் தற்போது முறைப்படி அறிவிக்கப்பட்டுள்ளன.

2025-ஆம் ஆண்டு டிசம்பர் 31-ஆம் தேதி நிலவரப்படி அரசு ஊழியர்களிடம் உள்ள சொத்து மற்றும் கடன் விவரங்கள் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும். சொத்து விவரங்களை அலுவலகத்தில் நேரடியாகவோ அல்லது காகித வடிவிலோ வழங்க வேண்டிய அவசியமில்லை. தமிழ்நாடு அரசின் ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனிதவள மேலாண்மை அமைப்பு இணையதளம் வழியாகவே முழுமையாகப் பதிவேற்றம் செய்ய வேண்டும்.

Advertisement

சொந்தப் பெயரில் அல்லது குடும்பத்தினர் பெயரில் உள்ள வீடு, மனை, விவசாய நிலம் உள்ளிட்ட விவரங்கள், நகைகள், வாகனங்கள், வங்கியில் உள்ள வைப்புத் தொகை மற்றும் பிற முதலீடுகள் ஆகியவை சேர்க்கப்பட வேண்டும். அரசு ஊழியர்கள் பெற்றுள்ள அனைத்து விதமான கடன் தொடர்பான தகவல்களையும் தவறாமல் குறிப்பிட வேண்டும். அரசு நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மையை உறுதி செய்யும் வகையில் இந்த நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in