LATEST NEWS
சும்மா சொல்லக்கூடாது… மரண வெயிட் சம்பவம்…! உலக வில்வித்தை வரலாற்றையே மாத்தி எழுதுன தீரஜ் பொம்மதேவரா..!!
முன்னணி இந்திய ‘ரிகர்வ்’ வில்வித்தை வீரரான தீரஜ் பொம்மதேவரா, நேற்று நடைபெற்ற உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் ஜப்பானின் நகானிஷி ஜுன்யாவை விறுவிறுப்பான ‘ஷூட்-ஆஃப்’ சுற்றில் வீழ்த்தி தங்கம் வென்றார். இதன் மூலம், இப்போட்டியில் தங்கம் வென்ற முதல் இந்திய ஆண் ‘ரிகர்வ்’ வில்வித்தை வீரர் என்ற பெருமையை அவர் பெற்றார். 2023 மற்றும் 2024 ஆகிய ஆண்டுகளில் பதக்கம் ஏதுமின்றி திரும்பிய நிலையில், 25 வயதான ராணுவ வீரரும் உலக தரவரிசையில் 10-ஆவது இடத்தில் இருப்பவருமான தீரஜ், இம்முறை அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
காலிறுதி மற்றும் அரையிறுதிச் சுற்றுகளைக் கடந்து வந்த அவர், கடும் போட்டி நிறைந்த ஐந்து சுற்றுகள் கொண்ட ஆட்டத்தில் உலகத் தரவரிசையில் 20-ஆவது இடத்தில் உள்ள நகானிஷியை 6-5 என்ற கணக்கில் தோற்கடித்தார். ஆட்டம் 5-5 என சமநிலையில் முடிந்த நிலையில், ‘ஷூட்-ஆஃப்’ சுற்றில் தீரஜ் 10-9 என்ற கணக்கில் வெற்றி பெற்றார். இந்த வெற்றியின் மூலம், உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் தங்கம் வென்ற முதல் இந்திய ஆண் ‘ரிகர்வ்’ வில்வித்தை வீரராக தீரஜ் திகழ்கிறார். இந்திய ஆண் ‘ரிகர்வ்’ வில்வித்தை வீரர் ஒருவர் இந்த மதிப்புமிக்க பட்டத்தை வெல்வதற்காக இருந்த 16 ஆண்டுகால காத்திருப்புக்கும் அவர் முற்றுப்புள்ளி வைத்தார். இதற்கு முன், 2010-இல் எடின்பர்க்கில் நடைபெற்ற போட்டியில் ஜெயந்தா தாலுக்தார் வெண்கல பதக்கம் வென்றதே, ஒரு இந்திய ஆண் ‘ரிகர்வ்’ வில்வித்தை வீரர் வென்ற கடைசிப் பதக்கமாக இருந்தது.
உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் தங்கம் வென்ற மற்றொரு இந்தியர் டோலா பானர்ஜி மட்டுமே; அவர் 2007-இல் துபாயில் நடைபெற்ற போட்டியில் பெண்கள் தனிநபர் பிரிவில் தங்க பதக்கம் வென்றிருந்தார். டோலாவின் வெற்றிக்குப் பிறகு, உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் எந்தவொரு இந்தியரும் தங்கம் வெல்லவில்லை. இருப்பினும், இந்தியர்களில் அதிக உலகக் கோப்பை இறுதிப் போட்டிப் பதக்கங்களை வென்றவர் தீபிகா குமாரி ஆவார்; அவர் எட்டு முறை இப்போட்டியில் பங்கேற்று ஐந்து வெள்ளி மற்றும் ஒரு வெண்கலப் பதக்கத்தை வென்றுள்ளார்.
