LATEST NEWS
“ஒரு குடம் தண்ணிருக்காக நடுரோட்டில் இப்படியா..? வாலிபர் கையில் எடுத்த ‘அந்த’ இரும்புப் பொருள்.. இளம்பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்.. நெஞ்சை பதறவைக்கும் பகீர் வீடியோ..!!
உத்தரப் பிரதேச மாநிலம் பிவார் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கார்கான் கிராமத்தில், பொதுக் குழாயில் தண்ணீர் பிடிப்பதில் ஏற்பட்ட தகராறு திடீரென வன்முறையாக மாறி, இரு தரப்பினரும் தடிகளாலும் இரும்புச் கம்பிகளாலும் ஒருவரையொருவர் கொடூரமாகத் தாக்கிக்கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை காலை கிராமச் சதுக்கத்தில் உள்ள கைக்குழாயில் தண்ணீர் பிடிப்பதற்காகக் காத்திருந்த கிராம மக்களிடையே, யாருக்கு அடுத்த முறை மற்றும் தண்ணீர் உடல் மீது தெரித்தது போன்ற காரணங்களால் வாக்குவாதம் தொடங்கியுள்ளது. இந்தச் சாதாரண வாய்ஸ்சண்டை கண் இமைக்கும் நேரத்தில் ஒரு பெரும் கோஷ்டி மோதலாக உருவெடுத்ததில், பெண்கள் உட்பட பலருக்குக் கடுமையான இரத்தக் காயங்கள் ஏற்பட்டுள்ளன.
இந்தக் கொடூர மோதலின் போது, வாலிபர் ஒருவர் அங்கு நின்ற பெண்ணை இரும்பு வாலியால் ஓங்கித் தலையில் தாக்கும் அதிர்ச்சியூட்டும் காட்சிகள் அடங்கிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகித் தீயாய் பரவி வருகிறது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பிவார் போலீசார், மோதலைக் கட்டுக்குள் கொண்டுவந்து காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த வன்முறைச் சம்பவம் தொடர்பாக இரு தரப்பிலிருந்தும் பெறப்பட்ட புகார்களின் அடிப்படையில் தற்பொழுது வழக்குப் பதிவு செய்யப்பட்டு, வீடியோவில் இருக்கும் நபர்களை அடையாளம் காணும் தீவிர விசாரணை முடுக்கிவிடப்பட்டுள்ளது.
