LATEST NEWS
“அடிதடி நடக்கும்னு பார்த்தா இப்படியா..?!” நள்ளிரவில் ரகசியமாக சந்தித்த காதலர்கள்.. கையும் களவுமாகப் பிடித்த பெற்றோர்கள் மாஸ் காரியம்.. வாலிபருக்கு காத்திருந்த மரண மாஸ் ட்விஸ்ட்.. வைரலாகும் சம்பவம்..!!
உத்தரப் பிரதேசத்தில் இரண்டு ஆண்டுகளாகக் காதலித்து வந்த இளம் ஜோடி ஒன்று, நள்ளிரவில் ரகசியமாகச் சந்தித்தபோது குடும்பத்தினரிடம் கையும் களவுமாகப் பிடிபட்டதை அடுத்து, இரவோடு இரவாக அவர்களுக்குக் கோவிலில் திருமணம் செய்து வைக்கப்பட்ட சுவாரசியமான சம்பவம் நடந்துள்ளது. காதலன் நள்ளிரவில் தனது காதலியைப் பார்ப்பதற்காக அவரது வீட்டிற்குச் சென்றுள்ளார்; அப்போது எதிர்பாராதவிதமாக இருவரையும் பெண்ணின் குடும்பத்தினர் பிடித்துள்ளனர். பொதுவாக இதுபோன்ற சூழல்களில் வன்முறை வெடிக்கும் நிலையில், இருதரப்பு குடும்பத்தினரும் சாமர்த்தியமாகச் செயல்பட்டு, உடனடியாக இருவரையும் அருகில் உள்ள கோவிலுக்கு அழைத்துச் சென்று முறைப்படி திருமணம் செய்து வைத்துள்ளனர்.
இரவோடு இரவாகக் கோவிலில் திருமணம் முடிந்த கையோடு, விடிந்ததும் அந்த வாலிபர் தனது புதுமனைவியுடன் அதிகாலையிலேயே சொந்த வீட்டிற்குத் திரும்பியுள்ளார். கடந்த இரண்டு ஆண்டுகாலக் காதலுக்குப் பிறகு, நள்ளிரவில் ஏற்பட்ட ஒரு சிறிய திருப்பத்தின் மூலம் இருவரும் தற்பொழுது எப்போதும் பிரியாத தம்பதிகளாக இணைந்துள்ளனர். பெற்றோர்களின் இந்த அதிரடி மற்றும் நேர்மறையான முடிவால் சமூக வலைத்தளங்களில் இந்தத் திருமணச் செய்தி தற்பொழுது காட்டுத்தீயாய் பரவி நெட்டிசன்களிடையே நெகிழ்ச்சியையும் பாராட்டுகளையும் பெற்று வருகிறது.
