LATEST NEWS
“அடுத்த பிரதமர் விஜய்” என புகழ்ந்த MLA கனிமொழி சந்தோஷுக்கு கிடைத்த முக்கிய பதவி… அதிரடி காட்டிய முதலமைச்சர் விஜய்…!!
கோவை கவுண்டம்பாளையம் தொகுதி எம்.எல்.ஏ கனிமொழி சந்தோஷ், தமிழ்நாடு சட்டப்பேரவையின் ‘சட்ட விதிகள் ஆய்வுக்குழு’ உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார். வழக்கறிஞர், ஜோதிட ஆய்வாளர், தொழில்முனைவோர் எனப் பன்முகத் திறமை கொண்ட இவர், கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட்டு அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றவர். “இன்றைய முதல்வர் விஜய் தான் நாளைய பிரதமர் வேட்பாளர்” என்று அண்மையில் இவர் கூறிய கருத்து பெரும் அரசியல் விவாதத்தை ஏற்படுத்திய நிலையில், தற்போது இவருக்குச் சட்டப்பேரவையில் இந்த கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
தனக்கு வழங்கப்பட்டுள்ள புதிய பொறுப்பு குறித்து எக்ஸ் (X) தளத்தில் பதிவிட்டுள்ள கனிமொழி சந்தோஷ், தம் மீது நம்பிக்கை வைத்து இந்த வாய்ப்பை அளித்த முதலமைச்சர் ஜோசப் விஜய்க்கும், சட்டப்பேரவைத் தலைவர் ஜே.சி.டி.பிரபாகருக்கும் தனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துள்ளார். மேலும், மக்கள் நலனையும் ஜனநாயக மாண்புகளையும் முன்னிறுத்தி, சட்டப்பேரவை விதிகள் தொடர்பான இந்தப் பணியை முழு அர்ப்பணிப்போடும் பொறுப்புணர்வுடனும் நிறைவேற்றுவேன் என்றும் உறுதியளித்துள்ளார்.
இவர் உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ள ‘சட்ட விதிகள் ஆய்வுக்குழு’ என்பது சட்டமன்றத்தின் தினசரி நடைமுறைகள், கூட்டத்தொடர் விதிகள் மற்றும் அவையின் செயல்பாடுகளை நெறிப்படுத்தும் மிக முக்கிய அமைப்பாகும். சட்டப்பேரவை நடவடிக்கைகளில் உள்ள குறைபாடுகளை ஆராய்ந்து காலத்திற்கேற்ப புதிய திருத்தங்கள் அல்லது விதிகளைப் பரிந்துரைப்பதும், அவையின் செயல்பாடுகள் சீராகவும் வெளிப்படைத்தன்மையுடனும் நடைபெறுவதை உறுதி செய்வதும் இக்குழுவின் முதன்மைப் பணியாகும்.
