LATEST NEWS
“டெபாசிட் கூட கிடைக்காது” இடைத்தேர்தலில் பின்வாங்கும் திமுக… வாபஸ் வாங்கும் திமுக… தமிழக அரசியலில் பரபரப்பு..!!
தாராபுரம் மற்றும் மதுராந்தகம் சட்டசபைக்கான இடைதேர்தல் அறிவித்த உடன் தமிழகத்தில் முதல் முதலில் வேட்பாளரை அறிவித்த கட்சி திமுக, ஆனால் வேட்பாளரை அறிவிப்புக்கு முன்பு, நடைபெறும் இடைதேர்தலை எப்படி சந்திக்க வேண்டும் என்கிற ஆலோசனை கூட்டம் திமுக மூத்த நிர்வாகிகளிடம் ஆலோசனை நடத்தி இருக்கிறார் முக ஸ்டாலின், இந்த ஆலோசனையில் உதயநிதி ஸ்டாலினும் பங்கேற்று இருக்கிறார்.
அப்போது கடந்த காலத்தில் ஆர் கே நகர் இடைதேர்தலை சுட்டி காட்டி, இந்த இடைதேர்தலில் போட்டியிடாமல் தவிர்த்து விடுவோம் என சில திமுக முக்கிய தலைவர்கள் தெரிவித்து இருக்கிறார்கள், காரணம் 24 கட்சிகளுடன் கூட்டணி வைத்து ஆர் கே நகர் இடைதேர்தலை சந்தித்த திமுக 3வது இடத்திற்கு தள்ளப்பட்டு டெபாசிட் தொகையை இழந்தது என்பது கடந்த காள வரலாறு, அந்த வகையில் எதிர்கட்சியாக திமுக இருந்த காலத்தில் இடைதேர்தல் திமுகவுக்கு சாதகமாக இருந்தது இல்லை.
இப்படியான சூழலில் இடைதேர்தலை புறக்கணித்தால் அது சரியான முடிவாக இருக்காது, தொண்டர்கள் சோர்வு அடைந்து விடுவார்கள், ஆளும் கட்சியினர் பயந்து கொண்டு இடைதேர்தலை புறக்கணித்து விட்டார்கள் என்றெல்லாம் விமர்சனம் செய்ய கூடும் என பேசி கொண்டே துரைமுருகனை நோக்கி என்ன செய்யலாம் , நீங்க என்ன சொல்றீக பொதுச் செயலாளரே என ஆலோசனை கூட்டத்தில் துரைமுருகனிடமும் ஆலோசனையை கேட்டு இருக்கிறார் முக ஸ்டாலின்.
அதற்கு இடைதேர்தலில் என்ன ஆனாலும் மோதி பார்த்துவிடுவோம் புறக்கணிக்க வேண்டாம், வேட்பாளரை அறிவிங்க என்று துறை முருகன் பேசி இருக்கிறார், அதற்கு உதயநிதி ஸ்டாலின் , துரைமுருகன் மாமா சொல்வது தான் சரியானது, இடைதேர்தலை நமக்கு விடப்பட்ட சவாலாக ஏற்று கொண்டு வேலை செய்யுவோம் என்று தெரிவிக்க அடுத்ததாக மதுராந்தகம் தொகுதியில் வேட்பாளர் யார் என்கிற தேர்வில்,
உதயநிதியின் ஒரே தேர்வான பரந்தாமன் இருந்திருக்கிறார், இதனை தொடர்ந்து தாராபுரம் மற்றும் மதுராந்தகம் தொகுதியின் இடைதேர்தலுக்கான வேட்பாளரை அறிவித்தது திமுக, அதனை தொடர்ந்து தவெக தரப்பில் இருந்தும் வேட்பாளர் பட்டியல் வெளியானது, அடுத்து அதிமுகவின் வேட்பாளர் அறிவித்த பின்பு தான் டி டி வி தினகரன் , அதிமுக – திமுக இடையில் பேச்சுவார்த்தை நடத்தி பொது வேட்பாளரை நிறுத்த முயற்சித்து இருக்கிறார்.
அதிமுக தரப்பில் வேட்பாளரை வாபஸ் பெற்று திமுகவுக்கு தொகுதியை விட்டு கொடுக்கலாமே என்று டிடிதினகரன் பேச அதற்கு எடப்பாடி பழனிசாமி தரப்பில் இருந்து, இது அதிமுக தொகுதி, இரண்டு தொகுதிகளையும் அதிமுக மீண்டும் கைவசம் படுத்தும் என்கிற ரேஞ்சுக்கு வர , இவர்களை எந்த காலத்திலும் திருந்தவே முடியாது என்கிற முடிவுக்கு வந்த டி டி வி தினகரன், இருந்தாலும் தன்னுடைய முயற்சியை கைவிடவில்லை.
அடுத்து திமுக தரப்பில் பேசி இருக்கிறார், இரண்டு தொகுதிகளிலும் பொது வேட்பாளரை நிறுத்தலாமே என்று பேச, அதற்கு இது திமுகவுக்கு பின்னடைவை ஏற்படுத்தும், திமுக போட்டியிடும் அதில் எந்த ஒரு மாற்றமும் இல்லை, நாங்கள் அறிவித்த வேட்பாளர் பட்டியலை வாபஸ் வாங்க மாட்டோம், அதிமுகவின் கட்டமைப்பை பலப்படுத்த வேண்டிய வேலை இருக்கும் அதனால் இந்த இடைதேர்தலை புறக்கணிக்கிறோம் என்று அதிமுக சார்பில் அறிவித்த வேட்பாளரை வேண்டுமானால் வாபஸ் வாங்க சொல்லுங்க என திமுக தரப்பில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
இருந்தும் எடப்பாடி போட்டியிடுவதில் உறுதியாக இருப்பதால், நடைபெற்று கொண்டிருக்கும் இரண்டு இடைதேர்தலிலும் அதிமுக டெபாசிட் இழந்து படு தோல்வியை அடையட்டும், அப்போது தான் அதிமுக முற்றிலும் அழிந்து திமுக – த வெக என நேரடி போட்டியாக எதிர்க்கத்தில் அமையும், என்கிற நோக்கத்துடன் நடைபெற்று கொண்டிருக்கும் இடைதேர்தலை அணுக இருக்கிறது திமுக என்கிற தகவல் வெளியாகி உள்ளது.
