LATEST NEWS
“யாரு சாமி நீ..? இவருக்கு ‘பெஸ்ட் கிரியேட்டிவிட்டி’ அவார்டு தரலாம் போலயே..!தேங்கிய தண்ணீரில் இளைஞர் செய்த காரியத்தைப் பாருங்கள்..!!”
சமீபத்தில் சமூக வலைதளங்களில் ஒரு வீடியோ மிகவும் வேகமாக பரவி வருகிறது. அதில், மழைநீர் தேங்கியுள்ள ஒரு சாலையில், ஒரு இளைஞர் கொசுவலை கட்டி, அதற்குள் எந்தக் கவலையுமின்றி நிம்மதியாகப் படுத்துத் தூங்கிக் கொண்டிருக்கிறார். பொதுவாகத் தண்ணீர் தேங்கிய பகுதியிலிருந்து அனைவரும் விரைவாக வெளியேற முயற்சிக்கும் நிலையில், இந்த இளைஞர் தனது வீட்டின் அறையில் தூங்குவது போலச் சாலையில் கொசுவலை அமைத்துப் படுத்திருப்பது காண்போரை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. இன்ஸ்டாகிராமில் பகிரப்பட்ட இந்த வீடியோவை லட்சக்கணக்கான மக்கள் பார்த்துள்ளனர்.
இந்த வீடியோ வைரலானதைத் தொடர்ந்து இணையவாசிகள் பலவிதமான கருத்துகளைத் தெரிவித்து வருகின்றனர். சிலர் இதை மிகவும் வேடிக்கையானது என்றும், அந்த இளைஞரின் படைப்பாற்றலை பாராட்டியும் கருத்துகளைப் பதிவிட்டுள்ளனர். மழைக்காலத்தில் அவருக்கு மிகவும் மலிவான ‘படுக்கையறை’ கிடைத்துவிட்டது என்றும், கொசுக்களிடம் இருந்து தப்பிக்கச் சரியான வழி கண்டுபிடித்துவிட்டார் என்றும் சிலர் நகைச்சுவையாகக் குறிப்பிட்டுள்ளனர்.
https://www.instagram.com/reel/DbsXz8cTrqG/?utm_source=ig_web_button_share_sheet
அதேவேளையில், பெரும் எண்ணிக்கையிலான மக்கள் இந்தச் செயலை மிகக் கடுமையான அலட்சியம் எனச் சாடியுள்ளனர். மழைநீருக்கு அடியில் திறந்தவெளி சாக்கடை மேன்ஹோல்கள், பள்ளங்கள், மின் கசிவு அல்லது வழுக்கும் அபாயம் எனப் பல உயிர் அச்சுறுத்தல்கள் மறைந்திருக்கக்கூடும் என்பதால், சமூக வலைதளங்களில் லைக்ஸ் மற்றும் பார்வைகளுக்காக இதுபோன்ற ஆபத்தான காரியங்களைச் செய்வது மிகவும் தவறானது என்றும், இதைப் பார்த்து யாரும் பின்பற்றக் கூடாது என்றும் நெட்டிசன்கள் எச்சரித்துள்ளனர்.
