LATEST NEWS
அப்போ எல்லாமே நாடகமா கோபால்..? சாப்பாட்டு வண்டியில் டிரம்ப் தப்பிய சம்பவத்தில் அம்பலமான உளவு அரசியல்… உலகையே ஏமாற்றிய அமெரிக்கா-இஸ்ரேல் கூட்டணி..!!
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் துருக்கியில் இருந்து வெளியேறும் போது, ஈரானின் ஏவுகணை அச்சுறுத்தல் இருப்பதாக இஸ்ரேல் எச்சரித்ததை அடுத்து அவர் ரகசியமாக விமானத்தை மாற்றியதாக ‘தி வாஷிங்டன் போஸ்ட்’ ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. கடந்த மாதம் துருக்கியில் நடைபெற்ற நேட்டோ மாநாட்டில் பங்கேற்ற டிரம்ப், ஏர் ஃபோர்ஸ் ஒன் விமானத்தில் திரும்பத் திட்டமிட்டிருந்தார். ஆனால், இஸ்ரேலிய உளவுத்துறை கொடுத்த எச்சரிக்கையால், அமெரிக்க ரகசிய பாதுகாப்புப் பிரிவு டிரம்பை உணவு விநியோக வண்டி மூலம் கடத்திச் சென்று, மிகவும் ரகசியமாக ஒரு சிறிய ராணுவ ஜெட் விமானத்தில் ஏற்றி அனுப்பியுள்ளது.
இருப்பினும், இஸ்ரேல் கொடுத்த இந்த “ஈரான் கொலைச் சதி” எச்சரிக்கை குறித்து அமெரிக்காவின் சிஐஏ உளவுத்துறை அதிகாரிகள் கடுமையான சந்தேகங்களை எழுப்பியுள்ளனர். இந்த உளவுத் தகவல் ஒற்றை ஆதாரத்தைக் கொண்டது என்றும், இதற்குப் போதிய ஆதாரங்கள் இல்லை என்றும் சிஐஏ ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். மத்திய கிழக்கில் டிரம்பின் முடிவுகள் மற்றும் அமெரிக்கக் கொள்கைகளில் செல்வாக்கு செலுத்துவதற்காகவே இஸ்ரேல் இத்தகைய அச்சுறுத்தல் நாடகத்தை அரங்கேற்றியிருக்கலாம் என்று சில அமெரிக்க அதிகாரிகள் கருதுகின்றனர். துருக்கிய பாதுகாப்புப் பிரிவினரும் தங்களது விசாரணையில் அங்கு டிரம்ப்பைத் தாக்க எந்தச் சதியும் நடக்கவில்லை என்பதை உறுதிப்படுத்தியுள்ளனர்.
டிரம்பிற்கு முந்தைய கொலை முயற்சிகளை மனதில் கொண்டு பாதுகாப்புப் படையினர் முன்னெச்சரிக்கையாக இந்த அதிரடி விமான மாற்றத்தைச் செய்துள்ளனர். சுவாரசியமாக, அச்சுறுத்தல் இருப்பதாகக் கருதப்பட்ட பழைய ஏர் ஃபோர்ஸ் ஒன் விமானத்திலேயே அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஆண்டனி பிளிங்கன் உட்பட டாப் அதிகாரிகள் சிலர் தொடர்ந்து பயணித்துள்ளனர். டிரம்பை ஏற்றிச் சென்ற கத்தார் நாட்டின் சொகுசு ஜெட் விமானத்தை முன்கூட்டியே அனுப்பிவிட்டு, செய்தியாளர்கள் மற்றும் வெள்ளை மாளிகை ஊழியர்களை ஏமாற்றவே இந்த மாற்று விமான உத்தி பயன்படுத்தப்பட்டது தற்பொழுது உலக அளவில் அம்பலமாகியுள்ளது.
