LATEST NEWS
“இது உண்மையிலேயே இந்தியாவா..? இல்ல வேற ஏதும் வெளிநாடா..?” சண்டிகரின் சுத்தத்தையும்.. நெரிசலில்லாத சாலைகளையும் பார்த்து வாயடைத்துப்போன பிரிட்டிஷ் வ்லாகர்..!!
பிரிட்டனைச் சேர்ந்த பிரபல பயண வ்லாகர் ஜாக் ஹீட்டன் இந்தியாவில் பயணம் செய்தபோது சண்டிகர் நகருக்கு வருகை தந்தார். இந்தியாவின் பிற முக்கிய நகரங்களில் காணப்படும் அதிகப்படியான கூட்ட நெரிசல் மற்றும் போக்குவரத்துச் சிக்கல்களுக்கு மத்தியில், சண்டிகரின் அமைதியான சூழலையும் தூய்மையையும் பார்த்து அவர் முற்றிலும் வியப்படைந்தார். “இந்த நகரம் இந்தியாவின் மற்ற பகுதிகளில் இருந்து முற்றிலும் மாறுபட்டுள்ளது; இங்கு அனைத்துமே மிகவும் சீராகவும் நேர்த்தியாகவும் கட்டமைக்கப்பட்டுள்ளது” என்று அவர் தனது வீடியோவில் மகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார்.
சண்டிகர் நகரின் இந்த தனித்துவமான அழகு மற்றும் கட்டமைப்புக்கு பின்னணியில் உள்ள காரணத்தையும் ஜாக் விளக்கியுள்ளார். சுவிஸ்-பிரெஞ்சு நாட்டின் பிரபல கட்டிடக் கலைஞர் லே கார்பூசியே என்பவரால் இந்த நகரம் ஒரு ‘கிரிட் சிஸ்டம்’ வடிவில் சிறப்பான திட்டமிடலுடன் வடிவமைக்கப்பட்டது. இங்குள்ள அகலமான சாலைகள், பசுமை நிறைந்த பூங்காக்கள் மற்றும் நவீன கட்டிடக் கலை ஆகியவை இந்நகரை இந்தியாவின் மிகவும் வசிக்கத் தகுதியான மற்றும் வசதியான நகரங்களில் ஒன்றாக மாற்றியுள்ளன என்று அவர் பாராட்டியுள்ளார். மேலும் பஞ்சாப் மற்றும் ஹரியானா ஆகிய இரு மாநிலங்களுக்கும் தலைநகராகவும், யூனியன் பிரதேசமாகவும் விளங்கும் இந்நகரில் சொத்துக்களின் தேவை அதிகரித்துள்ளதால், வீடுகளின் விலை $1 மில்லியன் வரை உயர்ந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
https://www.instagram.com/reel/DcdqNmSS3zk/?utm_source=ig_web_button_share_sheet
இணையத்தில் வைரலாகி வரும் இந்த வீடியோவிற்கு சண்டிகர் மக்கள் மற்றும் சமூக வலைதளப் பயனர்கள் பெருமிதத்துடன் கருத்துக்களைத் தெரிவித்து வருகின்றனர். “நாங்கள் சண்டிகரைச் சேர்ந்தவர்கள் என்பதில் பெருமை கொள்கிறோம்; வேறு எந்த ஊருக்குச் சென்றாலும் அங்கிருக்கும் நெரிசலும் நெரிசலான போக்குவரத்தும் தலைவலியைத் தருகிறது, சண்டிகர் நகரம் எங்களை அந்த அளவுக்கு அமைதியான வாழ்க்கைக்குப் பழக்கிவிட்டது” என்று உள்ளூர்வாசிகள் பலர் தங்களின் அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டு வருகின்றனர்.
