CRIME
“அதிர்ச்சி..! நள்ளிரவில் சிக்கிய 120 கிலோ கஞ்சா மூட்டைகள்..!” சிக்கிய தவெக நிர்வாகி.. அடுத்த சில மணி நேரங்களில் முதல்வர் விஜயின் அதிரடி உத்தரவு..
நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் அருகே சுமார் 120 கிலோ கஞ்சா கடத்திய வழக்கில் தமிழக வெற்றிக் கழகத்தின் உள்ளூர் நிர்வாகி உள்ளிட்ட சிலர் போலீசாரால் அதிரடியாகக் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆந்திராவிலிருந்து இரண்டு கார்கள் மூலம் கடத்தி வரப்பட்ட பல லட்சம் ரூபாய் மதிப்பிலான இந்த போதைப்பொருள் மூட்டைகள், கடல் வழியாக இலங்கைக்குக் கடத்தப்பட இருந்த நிலையில் வாகனச் சோதனையின் போது காவல்துறையினரால் பறிமுதல் செய்யப்பட்டன. போதைப்பொருள் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைதான நபர்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ள சூழலில், ஆளுங்கட்சியான தவெகவின் நிர்வாகியே இதில் சிக்கியது அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.
இந்த விவகாரம் வெளியான அடுத்த சில மணி நேரங்களிலேயே, தவெக தலைவரும் முதலமைச்சருமான விஜய் அவர்களின் உத்தரவின் பேரில் அந்த நிர்வாகி கட்சியிலிருந்து அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார். கட்சியின் கட்டுப்பாட்டை மீறியும், அமைப்பின் கண்ணியத்திற்குப் பாதகம் விளைவிக்கும் வகையிலும் செயல்பட்டதால், சம்பந்தப்பட்ட நபர் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உள்ளிட்ட அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் உடனடியாக நீக்கப்படுவதாகக் கட்சித் தலைமை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. தவறு செய்பவர்கள் யாராக இருந்தாலும், அவர்கள் சொந்தக் கட்சியினராகவே இருந்தாலும் தயவுதாட்சண்யமின்றி உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என்பதற்கு இந்த நீக்கமே சான்று எனத் தவெக தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
