LATEST NEWS
“திக் திக் நிமிடங்கள்… பின்னாலேயே சீறி வந்த மரணம்..!” ஓடக்கூட நேரமில்லாமல் அலறிய தொழிலாளர்கள்… நேபாள வெள்ளத்தின் நெஞ்சை நடுங்க வைக்கும் வைரல் வீடியோ!
நேபாள-திபெத் எல்லையில் இயற்கை கொடூரமான பேரழிவை ஏற்படுத்தியுள்ளது. திடீரென ஏற்பட்ட கனமழை, கொடூரமான வெள்ளம் மற்றும் நிலச்சரிவு ஆகியவை அங்குள்ள குடியிருப்பு பகுதிகளை நொடிப்பொழுதில் இடிபாடுகளின் குவியலாக மாற்றியுள்ளன. இந்தத் தொடர் இயற்கை சீற்றத்தினால் இதுவரை 150-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர் என்றும், நூற்றுக்கணக்கானோர் காணாமல் போயுள்ளனர் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த கொடூர சம்பவத்தின் திகிலூட்டும் வீடியோக்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி காண்போரை அதிர்ச்சியடையச் செய்துள்ளது.
வைரலாகும் ஒரு வீடியோவில், பாதுகாப்பு ஜாக்கெட்டுகளை அணிந்த சில தொழிலாளர்கள் தங்கள் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள ஓடுவதைக் காண முடிகிறது. அப்போது அவர்கள் பின்னாலிருந்து மலைபோல் திரண்டு வந்த சேறும் சகதியும் நிறைந்த வெள்ள நீர் அவர்களை நோக்கி ஆவேசமாக சீறிப் பாய்கிறது. இந்த வீடியோவைப் பதிவு செய்த நபர், பின்னால் திரும்பிப் பார்க்கக்கூட நேரமில்லாமல் அதிர்ஷ்டவசமாக ஓடித் தப்பித்துள்ளார். பின்னர் மீட்புக் குழுவினர் ஹெலிகாப்டர் மூலம் அவரை மீட்டு பாதுகாப்பான இடத்திற்குச் கொண்டு சென்றனர்.
https://www.instagram.com/reel/DcgkJDdlFCj/?utm_source=ig_web_button_share_sheet
இந்த பேரழிவு பல குடும்பங்களின் வாழ்க்கையில் ஆறாத வடுக்களை ஏற்படுத்தியுள்ளது. சேறு கலந்த வெள்ள நீர் வீட்டிற்குள் புகுந்தபோது, 68 வயதான கேசவ் பிரசாத் பரால் தனது மனைவியின் கையைப் பிடித்துக் கொண்டு வீட்டின் கூரைக்குத் தப்பிக்க முயன்றார். ஆனால் நீரின் வேகம் மிகவும் அதிகமாக இருந்ததால் மனைவியின் கை நழுவி, அவர் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு உயிரிழந்தார். மற்றொரு பாதிக்கப்பட்ட பிபேக் குமால் கூறுகையில், நிலநடுக்கம் ஏற்பட்டது போன்ற பயங்கரச் சத்தத்துடன் வெள்ளம் வந்ததாகவும், தப்பிக்க வழியின்றி மாமரத்தின் மீது ஏறி உயிர் பிழைத்ததாகவும் கூறியுள்ளார். தற்போது அங்கு ராணுவம் மற்றும் மீட்புக் குழுவினர் இடிபாடுகளுக்குள் சிக்கியவர்களைத் தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
