LATEST NEWS
ரஷ்யா-உக்ரைன் போர்க் களத்தில் 51 இந்தியர்கள் பலி..! சமையல் வேலை என நம்பி ஏமாந்த சோகம்… வெளியுறவுத்துறை வெளியிட்ட திடுக்கிடும் உண்மை..!!
ரஷ்ய ராணுவத்தில் சமையல்காரர் உள்ளிட்ட பணிகளுக்காக மொத்தம் 227 இந்தியர்கள் சேர்க்கப்பட்ட நிலையில், அவர்களில் 51 பேர் போரில் உயிரிழந்திருப்பதாக மத்திய வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளார்.
உயிரிழந்த 51 பேரைத் தவிர்த்து, இதுவரை 139 இந்தியர்கள் போர்க்களத்தில் இருந்து பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர் என்றும், மீதமுள்ளவர்களை பாதுகாப்பாக மீட்டெடுப்பதற்கான அனைத்து முயற்சிகளும் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் மேலும் கூறினார்.
