LATEST NEWS
ஐயோ கொடுமையே… மண்ணுக்குள் புதைந்த வாகனங்கள்… உள்ளே இருந்து வீசிய அந்த துர்நாற்றம்… நேபாளத்தில் வெளிவந்த கோர உண்மை…! வீடியோவைப் பார்த்தா நெஞ்சே நடுங்கிடும்..!!
நேபாளத்தில் ஏற்பட்ட பெருவெள்ளம் பேரழிவை ஏற்படுத்திய நிலையில், தற்போது பல இடங்களில் வெள்ள நீர் வடியத் தொடங்கியுள்ளது. ஆனால் வெள்ளத்திற்குப் பிறகு அங்கு எஞ்சியிருக்கும் காட்சிகள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்துகின்றன. வீடுகள் இடிபாடுகளுக்குள் புதைந்தும், கனரக வாகனங்கள் மற்றும் இயந்திரங்கள் சேற்றிலும் சேறு கலந்த மண்ணிலும் சிக்கியும் கிடக்கின்றன. இந்தப் பேரழிவின் கொடூரமான நிலையை விளக்கும் வீடியோ ஒன்றை வ்லாகர் சத்யம் பாண்டே தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட ஒரு கட்டுமானப் பகுதிக்குச் சென்ற அவர், அங்கு பெரிய டிரக்குகள், ஜேசிபி இயந்திரங்கள் போன்றவை சேற்றிலும் இடிபாடுகளிலும் ஆழமாகப் புதைந்திருப்பதாகக் காட்டியுள்ளார்.
வீடியோவில் சத்யம் பாண்டே ஒரு டிரக்கின் ஓட்டுநர் கேபினுக்குள் சென்று பார்க்கிறார். அதற்குள் வெள்ள நீரும் சேறும் புகுந்திருப்பதை கேபினின் நிலை உணர்த்துகிறது. ஸ்டீயரிங் மற்றும் ஓட்டுநர் இருக்கை தெரிந்தாலும், கேபினின் பெரும் பகுதி மண்ணால் நிரம்பியுள்ளது. மேலே ஓட்டுநரின் கம்பளி மற்றும் சில பொருட்கள் தென்படுகின்றன. அப்போது, அங்கிருந்து வீசிய கடுமையாகச் சகித்துக்கொள்ள முடியாத துர்நாற்றம் பற்றி அவர் குறிப்பிடுகிறார். ஏதேனும் இறந்த விலங்கு அல்லது சடலத்திலிருந்து வருவது போன்ற நாற்றம் வீசுவதாக அவர் தெரிவிக்கிறார் எனினும் அந்த நாற்றத்திற்கான சரியான காரணம் உறுதிப்படுத்தப்படவில்லை. மக்கள் உண்மையான நிலையைத் தெரிந்துகொள்ள வேண்டும் என்பதற்காகப் பெரும் ஆபத்தை எதிர்கொண்டு இந்த வீடியோவை எடுத்ததாக அவர் கூறுகிறார்.
https://www.instagram.com/reel/Dc0CcfFBNzP/?utm_source=ig_web_button_share_sheet
டிரக்கின் பின்புறம் ஏறி ஒட்டுமொத்தப் பகுதியையும் காட்டும் சத்யம் பாண்டே, அவ்வளவு பெரிய மற்றும் கனமான டிரக் கூட தரைமட்டத்திற்குச் சேற்றில் புதைந்திருப்பதைக் சுட்டிக்காட்டுகிறார். இதன் மூலம் வெள்ளம் எந்த அளவுக்கு மண் மற்றும் இடிபாடுகளை அடித்துக்கொண்டு வந்திருக்கும் என்பதை அறிய முடிகிறது. முன்பு கட்டுமானப் பணிகள் நடந்து கொண்டிருந்த அந்தப் பகுதி முழுவதும் தற்போது சேறும், சகதியும், கற்களும் நிறைந்து காணப்படுகின்றன. மீட்புக் குழுவினராலும் கூட எளிதில் வெளியே எடுக்க முடியாத அளவுக்கு வாகனங்கள் புதைந்துள்ளன. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில், கனரக வாகனங்களே மண்ணுக்குள் புதையும் அளவிற்கு நேபாள வெள்ளத்தின் தாக்கம் எவ்வளவு கொடூரமானதாக இருந்திருக்கிறது என்பதைக் கண்டு மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
