LATEST NEWS
ஐயோ கொடுமை..! மாடியில் விளையாடிக் கொண்டிருந்த 1 வயது குழந்தை… தண்ணீர் வாலியில் தலைகீழாக விழுந்து மூச்சுத்திணறி மரணம்..!!
ஃபரிதாபாத் ஜீவன் நகர் பார்ட்-2 ஈத்கா அருகில் ஒரு சோகமான சம்பவம் நடந்துள்ளது. வீட்டின் மொட்டை மாடியில் விளையாடிக் கொண்டிருந்த ஆர்யன் என்ற ஒரு வயதுக் குழந்தை, குளியலறைக்கு அருகில் வைக்கப்பட்டிருந்த தண்ணீர் நிரம்பிய வாளிக்குள் தலைகீழாக விழுந்து உயிரிழந்தது. செவ்வாய்க்கிழமை அன்று குடும்பத்தினர் அனைவரும் தங்களது வீட்டு வேலைகளில் பிஸியாக இருந்தபோது இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. குழந்தையின் தாய் மேல் அறையில் வேலை செய்து கொண்டிருந்தார், தந்தை பஜரங்கி வேலைக்குச் சென்றிருந்தார். குழந்தை ஆர்யன் அறைக்கு வெளியே மொட்டை மாடியில் தனியாக விளையாடிக் கொண்டிருந்தான்.
விளையாடிக்கொண்டே வந்த குழந்தை ஆர்யன், குளியலறைக்கு வெளியே வைக்கப்பட்டிருந்த தண்ணீர் வாளிக்கு அருகில் சென்றுள்ளான். அப்போது எதிர்பாராதவிதமாக தலைகீழாக வாளிக்குள் விழுந்த குழந்தையால் தானாக வெளியே வர முடியவில்லை. நீண்ட நேரமாக குழந்தையின் சத்தம் கேட்காததால், அவரது பாட்டி மீனா வெளியே வந்து பார்த்தபோது குழந்தை தண்ணீர் வாளிக்குள் கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். உடனே குழந்தையை மீட்ட குடும்பத்தினர் உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்ல ஏற்பாடு செய்தனர்.
குழந்தையை உடனடியாக அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர், ஆனால் குழந்தையின் நிலையைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவனைத் தனியார் மருத்துவமனைக்கு பரிந்துரைத்தனர். அதைத்தொடர்ந்து தனியார் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட குழந்தையைப் பரிசோதித்த மருத்துவர்கள், அவன் ஏற்கனவே இறந்துவிட்டதாக அறிவித்தனர். குழந்தையின் உடலை பிரேதப் பரிசோதனைக்காக ESIC மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையின் பிணவறைக்குச் சஞ்சய் காலனி காவல் சௌகி காவல்துறையினர் அனுப்பி வைத்துள்ளனர். இச்சம்பவம் குறித்து போலீசார் மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.
