LATEST NEWS
“பயங்கரமா பண்ணுறப்பா” உதயநிதி வீட்டிற்கே சென்று பாராட்டிய CM விஜய்… அண்ணன்-தம்பி போல இருந்தவங்க இன்னைக்கு… வைரலாகும் பழைய சம்பவம்..!!
அரசியலில் தற்போது எதிரெதிர் துருவங்களாக செயல்பட்டு வரும் தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் மற்றும் எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோருக்கு இடையே, சில ஆண்டுகளுக்கு முன்பு இருந்த நெருக்கமான நட்பு குறித்த தகவல்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவி வருகின்றன. திரைத்துறையிலும் அரசியலிலும் இன்று வெவ்வேறு பாதைகளில் பயணிக்கும் இவர்களின் பழைய சுவாரசியமான நினைவுகள் அரசியல் வட்டாரத்தில் நெகிழ்ச்சியையும் வியப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
சில ஆண்டுகளுக்கு முன்பு உதயநிதி ஸ்டாலினின் இல்லத்தில் நடைபெற்ற ஒரு குடும்ப விழாவில் முதலமைச்சர் விஜய் நேரில் கலந்து கொண்டுள்ளார். அப்போது உதயநிதியின் தீவிரமான அரசியல் செயல்பாடுகளைக் கவனித்து வந்த விஜய், அவரை நோக்கி “பயங்கரமா பண்ணுறப்பா” என நெஞ்சாரப் பாராட்டியுள்ளார். விஜய்யின் இந்தத் பாராட்டைப் புன்னகையுடன் ஏற்றுக் கொண்ட உதயநிதி, “சரி அண்ணா” என்று மிகுந்த மரியாதையுடன் தனது நன்றியைத் தெரிவித்துக் கொண்டதாக அந்தத் தகவல்கள் குறிப்பிடுகின்றன.
அன்று அண்ணன்-தம்பி போல அன்யோன்யமாகப் பழகி, ஒருவருக்கொருவர் வாழ்த்துகளைப் பரிமாறிக்கொண்ட இவர்களின் அப்போதைய நிலைக்கும், இன்றைய அரசியல் சூழலுக்கும் இடையே பெரிய மாற்றம் ஏற்பட்டுள்ளது. தமிழகத்தின் மிக முக்கிய அரசியல் தலைவர்களாகவும், அரியணையைத் தீர்மானிக்கும் முதன்மைப் போட்டியாளர்களாகவும் இன்று நேருக்கு நேர் களம் காண்பதை நெட்டிசன்கள் வியப்புடன் ஒப்பிட்டுப் பேசி வருகின்றனர்.
