CRIME
“குழந்தைகளை ஆபாசமாக வீடியோ எடுத்து” பெண் செய்த காரியம்… நீதிபதி சொன்ன தீர்ப்பைக் கேட்டு கோர்ட்டிலேயே சுருண்டு விழுந்த குற்றவாளி…!!
அமெரிக்காவின் அரிசோனா மாநிலத்தைச் சேர்ந்த 42 வயதான ஜோசுவா ஜேம்ஸ் லோசானோ என்பவர் மீது சிறுவர்களைப் பாலியல் ரீதியாகச் சுரண்டியதாக 10 தீவிரக் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன. இவர் மருத்துவமனை ஒன்றில் அறுவை சிகிச்சை உபகரணங்களைச் சுத்தம் செய்யும் பணியாளராக வேலை பார்த்து வந்துள்ளார். இணைய வழியில் சிறுவர்களிடம் தகாத முறையில் தொடர்பில் இருந்ததாக எழுந்த புகாரின் பேரில், காவல் துறையினர் தீவிர விசாரணை நடத்தி இவரைக் கைது செய்தனர்.
இந்த வழக்கின் முதல் விசாரணை ஃபீனிக்ஸ் நீதிமன்றத்தில் நடைபெற்றபோது, அரசுத் தரப்பு வழக்கறிஞர் இவர் மீதான 10 குற்றச்சாட்டுகளையும் வாசித்தார். ஒவ்வொரு குற்றச்சாட்டுக்கும் தலா 10 ஆண்டுகள் வீதம், அவருக்கு மொத்தம் 100 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை கிடைக்க வாய்ப்புள்ளது என்று வழக்கறிஞர் விவரித்துக் கொண்டிருந்தார். இதைக் கேட்ட அதிர்ச்சியில், போடியம் அருகில் நின்று கொண்டிருந்த லோசானோ திடீரென மயங்கி கீழே விழுந்தார்.
அவர் மயங்கி விழுந்ததால் நீதிமன்றத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக நீதிபதி வழக்கின் விசாரணையைத் தற்காலிகமாக நிறுத்திவைத்து, அவருக்கு அவசர மருத்துவ உதவி வழங்கிட உத்தரவிட்டார். சிறை மருத்துவப் பணியாளர்கள் அவருக்குச் சிகிச்சை அளித்ததைத் தொடர்ந்து, $150,000 பிணைத் தொகையுடன் மின்னணு கண்காணிப்பு சாதனம் அணிவது மற்றும் இணையத்தைப் பயன்படுத்தக் கூடாது என்ற கடுமையான நிபந்தனைகளுடன் பிணை வழங்கப்பட்டது.
