LATEST NEWS
மனைவியிடமே தீண்டாமையா..? மாதவிடாய் காலத்தில் மனைவியை மிருகம் போல் நடத்திய கணவன்… பெருமையாக வீடியோ போட்டவருக்குக் குவியும் கண்டனம்..!!
உத்தராகண்டில் மாதவிடாய் காலத்தில் உள்ள தனது மனைவியை வீட்டின் தனி அறையில் ஒதுக்கி வைத்து, அவருக்குத் தேவையான உணவுகள் மற்றும் சானிட்டரி நேப்கின்களைத் தொடாமல் தூக்கி வீசி விலங்கு போல நடத்தும் கணவரின் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 2026-ஆம் ஆண்டிலும் இத்தகைய பிற்போக்குத்தனமான மற்றும் மனிதாபிமானமற்ற செயலைச் செய்ததோடு மட்டுமன்றி, அதனைப் பெருமையுடன் இன்ஸ்டாகிராம் ரீல்ஸாக பதிவிட்டிருந்த அந்தக் கணவரின் செயலுக்கு நெட்டிசன்கள் தங்களது கடுமையான கண்டனங்களைப் பதிவு செய்து வருகின்றனர்.
https://www.instagram.com/reel/DdOuXwhTQex/?utm_source=ig_web_button_share_sheet
இந்த வீடியோ பரவியதைத் தொடர்ந்து, மாதவிடாய் என்பது ஒரு பெண்ணின் இயற்கையான உடல்நிலை சார்ந்த விஷயம் என்பதை உணராமல், அதைத் தீண்டத்தகாத ஒன்றாகச் சித்தரிக்கும் இத்தகைய காட்டுமிராண்டித்தனமான பழக்கவழக்கங்கள் இன்னும் சமூகத்தில் நீடிப்பது வேதனைக்குரியது என்று சமூக ஆர்வலர்கள் பலரும் சாடி வருகின்றனர். பெண்ணுரிமை மற்றும் மனிதநேயத்திற்கு எதிரான இந்தச் செயல் குறித்து உத்தராகண்ட் மாநிலக் காவல்துறையினர் மற்றும் தேசிய மகளிர் ஆணையம் (NCW) உடனடியாகத் தலையிட்டு, சம்பந்தப்பட்ட நபர் மீது கடுமையான சட்டப்படியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையும் இணையத்தில் வலுத்து வருகிறது.
