TRENDING
தனது ஒரே மகனுக்கு இறுதி சடங்கு செய்ய மறுத்த பெற்றோர்..??? 7 பேரின் உடலில் உயிருடன் இருக்கிறான்…!!! மனதை உருக்கும் சம்பவம் …
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியை அடுத்த காந்தி நகரைச் சேர்ந்தவர் சரத்குமார் வயது 21 . இவரது பெற்றோர் வெற்றிவேல் மற்றும் ராஜேஸ்வரி . சிவகுமார் சிவகங்கையில் இயங்கி வரும் ஒரு தனியார் வங்கியில் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் கடந்த ஜனவரி 11 ஆம் தேதி இரவு 8 மணிக்கு வேலை முடித்து தனது இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பி கொண்டு இருக்கும் பொழுது எதிர்பாராத விதமாக சாலை விபத்து ஏற்பட்டு சாலையின் ஓரத்தில் தூக்கி வீசப்பட்டார். செய்தி அறிந்து அவசர சிகிச்சை உதவி ஆம்புலன்ஸ் 2 மணி நேரம் தாமதமாக வந்தது விபத்து நடந்த இடத்திற்கு .
பிறகு அரசு மருத்துவ மனையில் அனுமதித்ததில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டு இருக்கிறது என்று மேல் சிகிச்சைக்காக மதுரையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். இரண்டு நாட்களுக்கு பிறகு சிவகுமாருக்கு மூளை சாவு ஏற்பட்டுவிட்டது. அதனால் பெற்றோர்களின் உதவியுடன் சிவகுமாரின் உடல் உறுப்பு தானம் பெற்று கொண்டனர் மருத்துவர்கள் . தற்பொழுது சிவகுமாரின் உடல் உறுப்பால் 7 நோயாளிகள் உயிரோடு இருப்பதாக தெரிவிக்க பட்டது.
மேலும் இறுதி சடங்கிற்காக சிவகுமாரின் உடலை பெற்றோர்கள் வாங்க மறுத்ததாக தெரிவிக்கப்பட்டது .ஏன் என்றால் எங்கள் மகன் 7 பேரின் உடலில் உயிரோடு இருக்கிறான் . அதனால் அவனுக்கு நாங்கள் இறுதி சடங்கு செய்யமாட்டோம் என்று சொல்லி மறுத்துவிட்டனர் என்று கூறப்படுகிறது.
