வீட்டில் தனியாக இருந்த இளம் பெண் …இரவு திரும்பி வந்து பார்த்த தோழி …??? உடம்பு முழுவதும் காயம் …அதிர்ச்சி சம்பவம்.. - cinefeeds
Connect with us

TRENDING

வீட்டில் தனியாக இருந்த இளம் பெண் …இரவு திரும்பி வந்து பார்த்த தோழி …??? உடம்பு முழுவதும் காயம் …அதிர்ச்சி சம்பவம்..

Published

on

காஞ்சிபுரம் மாவட்டத்தின் ஆதனஞ்சேரி பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் ஒடிசா மாநிலத்தை சேர்ந்த தீபா (22) என்ற பெண் வேலை பார்த்து வந்தார். தீபாவுடன் ரஞ்சிதா என்பவரும் ஒரே ரூமில் வசித்து வருகின்றனர். தினமும் இருவரும் ஒன்றாக வேலைக்கு செல்வார்கள். தீபா, மணிஷ் என்னும் இளைஞ்சரை காதலித்து வருகிறார். மணீஷ் சோழிங்கநல்லூரில் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருபவர். மேலும் தற்பொழுது காலை வேலைக்கு செல்லும் பொழுது ரஞ்சிதா மட்டும் வேலைக்கு சென்று உள்ளாள்.

தீபா நாள் முழுவதும் வீட்டில் இருந்து உள்ளாள் வேலைக்கு செல்லாமல். இரவு ரஞ்சிதா வீடு திரும்பியது தீபா போர்வையை போர்த்திக்கொண்டு தூங்கி கொண்டு இருந்தால் . அதனால் ரஞ்சிதா அவளை எழுப்பவில்லை மேலும் தீபா வெகு நேரமாக தூங்கி கொண்டு இருப்பதால் ரஞ்சிதா பலமுறை எழுப்பியுள்ளாள். ஆனால் அவள் எழுந்திருக்கவில்லை அதனால் அருகில் சென்று தீபா போத்தி கொண்டு இருக்கும் போர்வையை எடுத்துவிட்டு பார்க்கும் பொழுதுதான் தெரிந்தது. தீபாவின் உடம்பு முழுவதும் காயங்கள் இருந்தது மேலும் அவள் மயக்கத்தில் உள்ளதும்.

Advertisement

அதனால் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் ரஞ்சிதா தீபாவை மருத்துவமனைக்கு கொண்டு சென்ற பொழுது மருத்துவர்கள் தீபா இறந்து பலமணி நேரம் ஆகிறது என்று தெரிவித்தனர். மேலும் தீபாவின் மார்பகத்தில் அதிகமான காயங்கள் இருக்கிறது என்றும் அவளது கழுத்தில் இறுக்கி பிடித்தது போல் காயங்கள் இருக்கின்றது என்றும் தெரிவித்து உள்ளனர். அதனால் அவரது காதலன் மணீஷை விசாரிக்க சென்ற பொழுது அவர் தலை மறைவாகிவிட்டார் என்பது தெரிய வந்தது அதனால் அவர் தான் கொலைக்கு காரணமாக இருக்க கூடும் என்று அவரை தேடி வருகின்றனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in