Uncategorized
கொடூரமான முறையில் தந்தையை கொலை செய்த மூன்று இளம் மாணவிகள்..??? ஆதரவு கொடுக்கும் உலக மக்கள்…
ரஷ்யாவை சேர்ந்த கெரெஸ்டினா 19 வயது மற்றும் ஏஞ்சலினா 18 வயது மற்றும் மரியா கச்சதுரியன் 17 வயது மூன்று பெண்களும் சேர்ந்து தனது தந்தையை கொடூரமாக கொலை செய்த வழங்கினால் கைது செய்யப்பட்டு கடந்த இரண்டு வருடங்களாக சிறையில் உள்ளனர். அவர்களுக்கான வழக்கு இன்று தள்ளுபடி செய்யப்பட்டது. அதற்கான காரணம் அந்த பெண்களுக்கு உலக மக்கள் இடத்திலிருந்து கிடைத்த ஆதரவு தான் .
அந்த மூன்று இளம் பெண்களின் தந்தை அவர்களை தினமும் இரவில் ஒரு நாளுக்கு ஒரு பெண் என்கிற விதத்தில் பாலியல் வன்புறவு செய்து வந்துள்ளார். இதனால் தந்தையின் கொடுமை தாங்காமல் மனம் உடைந்த மகள்கள் தந்தை தங்களது வாழ்வை சீதைத்து கொண்டு இருக்கிறார் என்பதனை புரிந்து கொண்ட தருணத்தில் அவர்கள் தனது தந்தையை கொன்று விட வேண்டும் என்று முடிவெடுத்தனர்.
அதனால் கடந்த 2018 ஆம் ஆண்டு ஒரு நாள் இரவில் தனது தந்தையை அவர்கள் மூன்று பேரும் சேர்ந்து இரும்பு சுத்தி மற்றும் கத்தி கொண்டு அவர்கள் தந்தையை கொடூரமான முறையில் கொன்று விட்டனர். இந்த விஷயம் தெரிந்து அவர்களை கைது செய்து சிறையில் அடைத்து அவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்கிய வழக்கில் சோசியல் வலைத்தளம் மூலமாக அந்த மூன்று பெண்களுக்கும் ஆதரவு கொடுத்துவந்தனர்.
இதுவரை 350,000 க்கும் அதிகமான பொதுமக்கள் மூன்று இளம்பெண்களுக்கு எதிரான வழக்கு தள்ளுபடி செய்யப்பட வேண்டும் என ஒரு மனுவில் கையெழுத்திட்டனர். இதனால் அந்த மூன்று பெண்களுக்கு எதிரான தொடரப்பட்ட வழக்கு தற்பொழுது தள்ளுபடி ஆனது. அவர்கள் தற்பொழுது விடுதலை செய்யும் நிலையில் உள்ளனர்.
