TRENDING
‘சூர்யாவின் அயன் பட பாணியில்’… “தங்க கட்டிகள் கடத்தி வந்த இளைனர்கள்”… ராமேஸ்வரத்தில் நடந்த பரபரப்பு…?
தமிழ் நாட்டில் கடலோர மாவட்டமான ராமேஸ்வரம் இந்த பகுதி சுற்றுலா தளம் என்பதால் எப்பவும் பரப்பரப்புக்காக காணப்படுவது வழக்கம். சர்வதேச கடல் எல்லைப்பகுதி இருப்பதால் படகு மூலம் அதிகளவில் தங்கம் மற்றும் பல்வேறு உயிரினங்கள் போன்றவைகள் கடத்தப்படுவதாக மத்திய வருவாய் புலனாய்வு துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்து அதன் பேரில் இந்திய கடலோர காவல்படையினருடன் நேற்று முன்தினம் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது மண்டபம் அருகே இருக்கும் முயல் தீவுக்கும், வேதாளைக்கும் இடையில் கடலில் சென்று கொண்டிருந்த ஒரு பைபர் படகை அதிகாரிகள் நிறுத்த முயன்றனர். ஆனால் அதில் இருந்த இரு இளைனர்கள் அதிகாரிகளை பார்த்தவுடன் படகை நிறுத்தாமல் சென்றனர். பின்னர் அதிகாரிகள் அந்த படகை துரத்தி சென்று பிடித்தனர். அதில் மண்டபம் அருகே மரைக்காயர்பட்டினத்தை சேர்ந்த ஆசிக், பாரூக் என்ற இளைனர்கள் இருந்தனர்.
பின்னர் போலீசார் விசாரித்தனர். ஏன் அதிகாரகரிகளை பார்த்தவுடன் படகை நிறுத்தாமல் பயந்து ஓடினீர்கள் என்று விசாரணை மேற்கொண்டனர். அந்த இருவரும் முன்னுக்கு பின் முரணாக பதிலளித்தனர். இதனால் விசாரணையை தீவிரப்படுத்தினார்கள். பின்னர் இருவரும் இலங்கையில் இருந்து தங்கக்கட்டிகளை கடத்தி வந்தவர்கள் என தெரியவந்தது. அந்த நேரம் பார்த்து கடலோர காவல் படை துரத்த, கடலில் குறிப்பிட்ட ஒரு இடத்தில் தங்க கட்டிகளை வீசி விட்டதாக தெரிவித்துள்ளனர்.
மேலும் தங்கம் வீசப்பட்ட கடல் பகுதியை ஜி.பி.எஸ். கருவியின் உதவியுடன் அடையாளம் காணும் வகையில் அந்த இடத்தை எனது செல் போனில் பதிந்து வைத்துள்ளேன் என்று கூறினார்கள். அதைத்தொடர்ந்து நீச்சல் பயிற்சியில் நிபுணத்துவம் பெற்ற இந்திய கடலோர காவல்படையினர் 3 பேர், கொண்டு கடலில் ஜி.பி.எஸ். கருவியின் உதவியுடன் அந்த இடத்திற்கு சென்று கடலில் முழுகி 15 கிலோ தங்க கட்டிகள் எடுத்து வரப்பட்டது.
மேலும் இதன் சர்வதேச மதிப்பு ரூ.7 கோடி ஆகும் இந்த நூதன கொள்ளை சம்பவம் சினிமா பாணியை மிஞ்சும் வகையில் உள்ளதாக பேசப்பட்டு வருகிறது.
