Uncategorized
மக்கள் அனைவரும் உஷாராகி கொள்ளுங்கள் ஏனென்றால். கொரோனா தங்கத்தையும் விட்டுவைக்கவில்லை…….. நீங்களே பாருங்கள்…?
சில மாதங்களாகத் தொடர்ந்து உச்சத்தை சந்தித்த தங்கத்தின் விலை தற்போது சரிவையும் சந்தித்துள்ளது…
கொரோனா வைரஸ் உலகையே ஆட்டிப்படைத்து வருவதால் முதலீட்டாளர்கள் அனைவரும் பாதுகாப்பு கருதி தங்கத்தில் முதலீடு செய்ய ஆரம்பித்து விட்டனர். இதனால் இந்தியாவில் தங்கத்தின் விலை கடந்த சில மாதங்களாக ராக்கெட் வேகத்தில் எகிற ஆரம்பித்தது.சில நாள்களுக்கு முன்பு வரை உச்சத்தில் இருந்த தங்கம் கடந்த 3 தினங்களாக படிப்படியாக குறைய ஆரம்பித்து இருக்கிறது.
அதன்படி சென்னையில் நேற்று ஆபரணத் தங்கம் ஒரு பவுன் ரூ. 33, 256-க்கும், ஒரு கிராம் ரூ. 4,157-க்கும் விற்பனை ஆனது. இன்று காலை வர்த்தகத்தின் போது தங்கம் விலை மேலும் சவரனுக்கு 1096 ரூபாய் சரிவடைந்து ஒரு சவரன் ரூ.32 ஆயிரத்து 160க்கு விற்பனை ஆனது. ஒரு கிராம் ரூ.4020 ஆக இருந்தது. இந்த நிலையில் தற்போது மேலும் பிற்பகல் சரிவடைந்து, ஒரு சவரன் 32 ஆயிரத்து 104 ரூபாய்க்கும், ஒரு கிராம் 4013 ரூபாய்க்கும் விற்பனை ஆகின்றது…
இதற்கு மேலும் தங்கத்தின் விலை சரிவு அடையும் என்று வர்த்தக அமைப்பானது வெளியிட்டது…