LATEST NEWS
“அய்யோ கடவுளே..! பெண்ணை எலின்னு நினைச்சுப் பாய்ந்த ராட்சதப் பறவை..!” நடுரோட்டில் ஓடிய டயட் அழகிக்கு நேர்ந்த மரண பயங்கரம்.. குலை நடுங்க வைக்கும் பின்னணி..!!
அமெரிக்காவைச் சேர்ந்த வெள்ளை இனப் பெண் ஒருவர், வழக்கம்போலத் தனது தினசரி காலை உடற்பயிற்சி ஓட்டத்தை மேற்கொண்டிருந்த போது, தன்னைச் சுற்றியுள்ள சூழலைச் சற்றும் கவனிக்காத வேளையில் ஒரு பிரம்மாண்ட பறவை தன்னை எலி எனத் தவறாக நினைத்து வேட்டையாடப் பாய்ந்த அதிர்ச்சியூட்டும் அமானுஷ்யச் சம்பவம் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. அவர் ஓடிக்கொண்டிருந்த போது திடீரென ஏதோ ஒன்று தன்னை மிக வேகமாகக் கடந்து சென்றதை உணர்ந்துள்ளார்; ஆனால் முதல் முறை எதையும் பார்க்காததால் அவர் தனது ஓட்டத்தைத் தொடர்ந்துள்ளார். எனினும், சில நிமிடங்களிலேயே அதே விசித்திரமான அச்சுறுத்தல் மீண்டும் அதிவேகத்தில் அரங்கேறிய போதுதான், வானில் இருந்து ஒரு மாபெரும் ராட்சதப் பறவை தன்னை ஒரு சிறிய எலி அல்லது அணில் எனத் தவறாகக் கணித்து, தன் கூர்மையான நகங்களால் கவ்விச் சென்று உணவாக்கிக் கொள்வதற்காகத் தன் மீது அசுரத்தனமாகப் பாய்ந்து வந்த கொடூர உண்மையை அவர் கையும் களவுமாக உணர்ந்து உறைந்துபோயுள்ளார்.
https://twitter.com/iMessaage_/status/2092649080212107759/video/1
இந்த சம்பவம் குறித்து அந்த பெண் கண்ணீருடன் கூறும் வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் பக்கங்களில் காட்டுத்தீயாய் பரவி வருகிறது. ஒருவேளை நாம் அந்தப் பெண்ணின் இடத்தில் இருந்திருந்தால், இத்தகைய ஆபத்தான சூழலில் ஒரு பறவையிடமிருந்து தப்பிப்பது அவ்வளவு கடினமான காரியமாக இருந்திருக்காது; சற்றும் பதற்றமடையாமல் உடனடியாக அருகில் உள்ள ஒரு கடைக்கோ அல்லது மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பொது இடத்திற்கோ ஓடிச் சென்றிருந்தால், அந்த ராட்சதப் பறவை பயந்து பின்வாங்கியிருக்கும் எனப் பலரும் தங்களது கருத்துக்களைப் பகிர்ந்து வருகின்றனர். “வார்த்தைகளே இல்லாத அசைக்க முடியாத அச்சுறுத்தல்” என நெட்டிசன்கள் இப்பதிவைக் கண்டு மிரண்டு போயுள்ள வேளையில், தனிமையான காடுகளையொட்டிய சாலைகளில் ஓடும்போது காதுகளில் ஹெட்போன் (Headphones) அணிந்து கொண்டு கவனக்குறைவாக இருக்கக் கூடாது என்று சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் இந்த வைரல் வீடியோ மூலம் பவர்ஃபுல் எச்சரிக்கையை விடுத்துள்ளனர்.
