LATEST NEWS
யாரு சாமி நீ..? திருமணமாகி 45 நாட்களில்.. கணவருக்குத் தூக்க மாத்திரை கொடுத்துவிட்டு… காதலனை வீட்டுக்கே வரவழைத்த மனைவி.. அடுத்து நடந்தது தான் வேற லெவல் சம்பவம்..!!
உத்தரப் பிரதேச மாநிலத்தில், திருமணமான 45 நாட்களிலேயே கணவருக்குத் தூக்க மாத்திரை கொடுத்துவிட்டு, தனது கள்ளக்காதலனுடன் தனிமையில் இருந்த புதுப்பெண்ணைக் கணவர் கையும் களவுமாகப் பிடித்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் உள்ள மக்கள் மத்தியில் அதிர்ச்சியையும், விவாதத்தையும் கிளப்பியுள்ளது.
பாதிக்கப்பட்ட கணவர் சில நாட்களாகவே இரவு நேரத்தில் தனக்குத் தீவிரமான தூக்கக் கலக்கம் ஏற்படுவதைக் கவனித்து வந்துள்ளார். மனைவியின் நடத்தையில் சந்தேகம் அடைந்த அவர், சம்பவத்தன்று வழக்கம்போல வேலைக்குச் செல்வது போல் நடித்துவிட்டு, மர்மத்தை உடைக்கத் திட்டமிட்டுள்ளார். மனைவி கொடுத்த உணவைச் சாப்பிடாமல், வீட்டின் அருகே மறைந்திருந்து நடப்பதைக் கண்காணித்துள்ளார்.
கணவர் வெளியே சென்றதை உறுதி செய்துகொண்ட மனைவி, உடனடியாகத் தனது காதலனை வீட்டிற்கு வரவழைத்துத் தனிமையில் இருந்துள்ளார். அப்போது, எதிர்பாராதவிதமாக கணவர் முன்கூட்டியே வீட்டிற்குள் நுழைந்தபோது, மனைவியும் அவரது காதலனும் அவரிடம் வசமாகச் சிக்கினர். விசாரணையில், கணவருக்குத் தெரியாமல் இரவு உணவில் தொடர்ந்து தூக்க மாத்திரை கலந்து கொடுத்ததை அந்தப் பெண் ஒப்புக்கொண்டார்.
