LATEST NEWS
திடீர் திருப்பம்..! உளுந்தூர்பேட்டை விசிக மாநாட்டில் சதி..? அங்கே நடந்தது என்ன..? உண்மையை உடைத்த திருமாவளவன்..!!
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் நடைபெற்ற விசிக மாநாட்டில் ஏற்பட்ட கூட்ட நெரிசலுக்குப் பின்னணியில் எந்தவிதமான சதியும் இருப்பதாகத் தெரியவில்லை என அக்கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் அதிகாரப்பூர்வமாக விளக்கம் அளித்துள்ளார். விசிக தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் சிலர் இந்த விபத்தின் பின்னணியில் சதி வேலைகள் இருக்கலாம் என்று சந்தேகம் கிளப்பி, காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்த நிலையில் அவர்களின் கூற்றை திருமாவளவன் மறுத்துள்ளார்.
மாநாட்டு மேடையில் ஏற்பட்ட இடநெருக்கடிக்கான உண்மையான காரணத்தை அவர் வெளிப்படையாக ஒப்புக்கொண்டுள்ளார். “மேடையில் 400 பேருக்கு இருக்கை போடச் சொன்னதே நான்தான்; அனுமதிக்கப்பட்ட அளவைத் தாண்டி மேடையில் அதிகளவில் நபர்கள் ஒரே நேரத்தில் ஏறியதாலேயே இந்த நெரிசல் ஏற்பட்டது” என்று அவர் தெளிவுபடுத்தியுள்ளார். இதன் மூலம் திட்டமிடப்படாத மனித தவறுகளே இந்த அசம்பாவிதத்திற்கு காரணம் என்பதை அவர் உறுதி செய்துள்ளார்.
இந்த விளக்கத்தின் மூலம் கட்சி நிர்வாகிகளுக்குள் எழுந்த தேவையற்ற சந்தேகங்களுக்கும், பரவி வந்த வதந்திகளுக்கும் முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.
