LATEST NEWS
“நீங்களா மனுஷங்களா…?! கதறக் கதற நாயை சித்திரவதை செய்து கொடூர கொலை… மலேசியாவையே உலுக்கிய வைரல் வீடியோ..!!”
போர்ட் கிளாங்கில் “ராக்கி” என்ற செல்லப் பிராணி நாய் கொடூரமாக தாக்கப்பட்டு, கழுத்து நெரிக்கப்பட்டு, இழுத்துச் செல்லப்பட்டு கொல்லப்பட்டதாகக் கூறப்படும் அதிர்ச்சி வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி மலேசியா முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஜூலை 29-ஆம் தேதி இரவு 10.50 மணியளவில் தாமான் தெலுக் கெடுங் இண்டா பகுதியில் இந்தச் சம்பவம் நடந்துள்ளது. நாயின் உரிமையாளர் தனது செல்லப் பிராணியை மீட்க முயன்றபோது, மரக்கட்டையால் தாக்கப்பட்டு பலத்த காயமடைந்ததாகவும் கூறப்படுகிறது.
மலேசிய விலங்குகள் நல அமைப்பு வெளியிட்ட தகவலின்படி, கயிற்றால் நாயின் கழுத்து நெரிக்கப்பட்டிருந்த நிலையில், அதை விடுவிக்குமாறு உரிமையாளர் கதறியும் அங்கிருந்தவர்கள் கேட்கவில்லை. உரிமையாளரின் கண் முன்னாடியே ரோக்கி அசைவற்றுப் போய் உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்தச் சம்பவம் நடந்தபோது கிள்ளான் அரச மாநகரக் கட்சியின் இரு அதிகாரிகள் அங்கு இருந்ததாகவும், கொடூரமான இந்தச் செயலை அவர்கள் ஏன் உடனடியாகத் தடுக்கவில்லை என்பது குறித்தும் கேள்வி எழுப்பியுள்ளது.
https://www.instagram.com/reel/DbcwUE5zHDR/?utm_source=ig_web_button_share_sheet
இச்சம்பவம் குறித்து விரிவான விசாரணை நடத்தப்பட்டு, சம்பந்தப்பட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என பொதுமக்கள் மற்றும் விலங்குகள் நல அமைப்புகள் கோரிக்கை விடுத்துள்ளன. ரோக்கியின் உடல் உடற்கூறாய்வுக்காகச் சிலாங்கூர் கால்நடை பராமரிப்புத் துறையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. உரிமம் இல்லாதது போன்ற காரணங்களைக் கூறி விலங்குகளைக் கொடூரமாகத் துன்புறுத்துவதை ஏற்க முடியாது என்றும், விலங்கு நலச் சட்டம் 2015-ன் கீழ் காவல்துறை மற்றும் கால்நடைத் துறை தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
