LATEST NEWS
கொரோனா வைரஸ் பாதித்த பாடகி’… “கனிகாகபூர் உடன் பார்ட்டியில் கும்மாளம் போட்ட 56 பேரின் நிலைமை”…. வெளிவந்த அதிர்ச்சி…?
பாலிவுட் பிரபல இளம் பாடகி கனிகாகபூர் சமீபத்தில் கலைநிகழ்ச்சிக்க லண்டனுக்கு சென்று இந்தியா திரும்பிய போது, அப்போது விமானநிலையத்தில் கொரோனா குறித்த பரிசோதனை செய்தனர். ஆனால் நடிகை பரிசோதனை செய்யாமல் அதிலிருந்து தப்பி சென்றுள்ளார். இதனையடுத்து அவருக்கு தற்போது கொரோனா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டு அதனால் அவர் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளித்து வருகிறாகள்.
ஏற்கனவே தனக்கு கொரோனா பாதிப்பு இருப்பதை அறிந்த நடிகை ஒரு பார்ட்டியில் கலந்து கொண்டுள்ளார். அந்த பார்ட்டியில் மொத்தம் சுமார் 56 பேர் கலந்து கொண்டுள்ளனர். இதனையடுத்த அந்த பார்ட்டியில் கலந்துகொண்ட 56 பேர்களின் இரத்த மாதிரிகள் சோதனை செய்யப்பட்டதில் தற்போது 11 பேரின் முடிவுகள் வெளிவந்துள்ளது
இந்த பரிசோதனையின் முடிவின்படி அந்த 11 நபர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்படவில்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இருப்பினும் மீதமுள்ள 45 பேர்களின் மருத்துவ அறிக்கை வந்தால் மட்டுமே அதில் எத்தனை பேருக்கு கொரோனா தொற்று இருக்கின்றது என்பதை முடிவு செய்ய முடியும். மேலும் நடிகையின் இந்த ஒழுங்கீன மற்ற செய்யலால் தற்போது மக்கள் அனைவரும் பீதி அடைந்துள்ளனர்.
