CINEMA
கோவா கடற்கரையில் குடும்பத்துடன் கும்மாளம் போடும் ‘வாரணம் ஆயிரம்’ பட நடிகை… உங்களுக்கு இவ்ளோ பெரிய குழந்தைகளா?… கியூட் பேமிலி பிக்ஸ்…

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வந்தவர் நடிகை சமீரா ரெட்டி. இவர் இயக்குனர் கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் 2008ல் வெளியான ‘வாரணம் ஆயிரம்’ திரைப்படத்தில், நடிகர் சூர்யாவுக்கு ஜோடியாக நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.
ஹிந்தி திரை உலகில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை சமீரா ரெட்டி.
இவர் இதை தொடர்ந்து தமிழில் வெடி, அசல், பேட்ட என ஒரு சில திரைப்படங்களில் நடித்தார். தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, ஹிந்தி என பல மொழிகளிலும் நடித்து அசத்தினார்.
இதை தொடர்ந்து பட வாய்ப்புகள் குறைந்த அவர் திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆனார்.
2014இல் மகாராஷ்டிராவை சேர்ந்த அக்ஷய்குமார் என்பவரை திருமணம் செய்து கொண்ட இவருக்கு தற்பொழுது இரண்டு பிள்ளைகள் உள்ளனர்.
திருமணத்திற்கு பிறகு திரைப்படங்களில் நடிப்பதை முற்றிலும் தவிர்த்து விட்டார் நடிகை சமீரா ரெட்டி. தனது குழந்தைகளுடன் மகிழ்ச்சியான வாழ்வை வாழ்ந்து வருகிறார் நடிகை சமீரா.
சோசியல் மீடியாவில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்க கூடியவர் நடிகை சமீரா ரெட்டி. இவர் தற்பொழுது கோவாவுக்கு குடும்பத்தோடு சுற்றுலா சென்றுள்ளார்.
அங்கு தன் குடும்பத்தோடு எடுத்துக் கொண்ட அழகிய புகைப்படங்களை இணையத்தில் பதிவு செய்ய அப்புகைப்படங்கள் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.