LATEST NEWS
BREAKING: 56.72 கோடி மதிப்பீட்டில் “அம்பேத்கர் வேளாண் உதவி திட்டம்”.. பட்ஜெட்டில் அறிவிப்பு..!!
தமிழக வேளாண் பட்ஜெட்டில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில், ₹56.72 கோடி மதிப்பீட்டில் ‘அம்பேத்கர் வேளாண் உதவி திட்டம்’ செயல்படுத்தப்படும் என வேளாண்துறை அமைச்சர் வினோத் அறிவித்துள்ளார். இத்திட்டத்தின் கீழ், எஸ்சி/எஸ்டி வகுப்பைச் சேர்ந்த சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு, உயர்மதிப்பு வேளாண் திட்டங்களை மேற்கொள்வதற்காக 20 சதவீதம் கூடுதல் மானியம் வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த விவசாயிகள் நவீன சாகுபடி முறைகளுக்கு மாறுவது எளிதாக்கப்படும்.
மேலும், இத்திட்டத்தின் முக்கிய அம்சமாக விவசாயப் பாசன வசதிகளை மேம்படுத்த 100 சதவீத முழு மானிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன. அதன்படி, மின்மோட்டார் மற்றும் சூரிய சக்தி மூலம் இயங்கும் பம்புசெட்டுகளுடன் கூடிய 300 ஆழ்துளை கிணறுகள் அல்லது குழாய்க்கிணறுகள் அமைப்பதற்கு விவசாயிகளுக்கு 100 சதவீத மானியம் வழங்கப்படும் என அமைச்சர் வினோத் தனது பட்ஜெட் உரையில் குறிப்பிட்டுள்ளார். இந்த அதிரடி சலுகைகள் ஆதிதிராவிட மற்றும் பழங்குடியின விவசாயிகளிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன.
